பதிவு செய்த நாள்
21 மார்2020
04:16
புதுடில்லி : ஏர் இந்தியா நிறுவனத்தில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்வதற்கான வரம்பு, 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் குழு கூட்டத்தில், ஏர் இந்தியா நிறுவனத்தின், 100 சதவீத பங்குகளை வாங்க, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அனுமதி அளிப்பது என, முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது, விமான சேவை நிறுவனங்களில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்வதற்கான வரம்பு, 49 சதவீதமாக உள்ளது. இது குறித்து, மத்திய தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஏர் இந்தியா நிறுவனத்தில், அன்னிய விமான நிறுவனங்கள் உள்ளிட்ட, அன்னிய
முதலீட்டாளர்கள் செய்யும் முதலீடு, 49 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கக்கூடாது.
இருப்பினும், இந்திய குடியுரிமை கொண்ட, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், ஏர் இந்தியாவில், 100 சதவீதம் முதலீடு செய்யலாம்.வெளிநாட்டு வாழ் இந்தியர்களும், இந்திய முதலீட்டாளர்களாகவே கருதப்படுவர்.எனவே, அவர்கள், 100 சதவீத முதலீடை மேற்கொள்ளலாம். இதற்கான அமைச்சரவை முடிவு, கடந்த, 4ம் தேதி எடுக்கப்பட்டது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|