பதிவு செய்த நாள்
21 மார்2020
04:25
திருப்பூர் : ‘கொரோனா’ குறித்து அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தரும் வகையில், ஜவுளி உற்பத்தியை, ஏப்., 5 வரை நிறுத்தி வைத்துள்ளதாக, ஜவுளி உற்பத்தியாளர் சங்கங்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
ஜவுளி உற்பத்தியாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் அவசர கூட்டம், மங்கலத்தில் நேற்று நடந்தது. கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன், இந்த கூட்டத்துக்கு தலைமை வகித்தார்.
அரசு எடுத்து வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தரும் வகையில், ஜவுளி உற்பத்தியை நிறுத்தம் செய்வது என, கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது.
ஜவுளி உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், ‘ஏப்., 5 வரை, ஜவுளி உற்பத்தி முழுமையாக நிறுத்தி வைக்கப்படும்.
‘உற்பத்தியாளர்களின் உற்பத்தி நிறுத்த முடிவுக்கு, விசைத்தறியாளர்களும், விசைத்தறி தொழிலாளர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|