பதிவு செய்த நாள்
27 மார்2020
03:38
மும்பை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 1.70 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சலுகைகளை அறிவித்ததன் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தைகள், நேற்று தொடர்ந்து மூன்றாவது நாளாக ஏற்றம் கண்டன.மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், நேற்று, 1410 புள்ளிகள் அதிகரித்து, 29946.77 புள்ளிகளாக உயர்ந்தது.
இது, 4.94 சதவீத அதிகரிப்பாகும்.இதேபோல், தேசிய பங்குச் சந்தையின் நிப்டி, 323.60 புள்ளிகள் அதிகரித்து, 8641.45 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, 3.89 சதவீத உயர்வாகும்.நேற்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் பிரிவில், இண்டஸ்இண்ட் பேங்க் பங்குகள் அதிக விலை உயர்வை சந்தித்தன. இந்நிறுவனப்பங்குகளின் விலை, 46 சதவீதம் அளவுக்குஅதிகரித்தது.
இதையடுத்து, ‘பார்தி ஏர்டெல், எல்., அண்டு டி., பஜாஜ் பைனான்ஸ், கோட்டக் மகிந்திரா, பஜாஜ் ஆட்டோ’ உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்ந்தன.மாறாக, ‘மாருதி, டெக் மகிந்திரா, சன் பார்மா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தது.தொழில்கள் குறித்த சலுகைகள், மத்திய நிதியமைச்சரின் அடுத்த அறிவிப்பில் இருக்கும் என எதிர்பார்ப்புகள் நிலவுவதால், சந்தை இன்னும் உயரும் என எதிர்பார்க்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|