பதிவு செய்த நாள்
03 ஏப்2020
23:16
மும்பை:ஆசிய மேம்பாட்டு வங்கியின் பொருளாதார கணிப்புகளாலும், வங்கி பங்குகள் விலை சரிவாலும், கொரோனா வைரஸ் தாக்குதலால் பொருளாதார நிலையில் நிச்சயமற்ற தன்மை அதிகரித்ததாலும், நேற்று, பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், வர்த்தகத்தின் இறுதியில், 674.36 புள்ளிகள் சரிந்து, 27,590.95 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, 2.39 சதவீத சரிவாகும்.இதைப்போலவே, தேசிய பங்குச் சந்தையின் நிப்டியும், 170 புள்ளிகள் சரிந்து, வர்த்தக இறுதியில், 8,083.80 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, 2.06 சதவீத சரிவாகும்.நேற்றைய வர்த்தகத்தில், ஆக்சிஸ் பேங்க் பங்குகள், 9 சதவீதம் அளவுக்கு விலை சரிவைக் கண்டன.
இதை தொடர்ந்து, இண்டஸ் இண்ட் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், டைட்டன், எஸ்.பி.ஐ., மாருதி, எச்.டி.எப்.சி., ஏஷியன் பெயின்ட்ஸ் ஆகியவையும் சரிவைச் சந்தித்தன.மாறாக, சன் பார்மா, ஐ.டி.சி., ஓ.என்.ஜி.சி., மகிந்திரா அண்டு மகிந்திரா, டெக் மகிந்திரா ஆகிய நிறுவன பங்குகள் விலை உயர்ந்தன.ஆசிய மேம்பாட்டு வங்கி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, நடப் பாண்டில், 4 சதவீதமாக குறையும் என அறிவித்தது, சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும், கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக வந்த செய்திகளும், பாதிப்பை ஏற்படுத்தின.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|