பதிவு செய்த நாள்
22 ஏப்2020
03:07
புதுடில்லி : பன்னாட்டு நிறுவனங்கள், சீனாவிலிருந்து வெளியேற விரும்பும் நிலையில், இந்தியா, இந்த சந்தர்ப்பத்தை தவற விட்டுவிடக் கூடாது என, நிடி ஆயோக்கின் முன்னாள் துணைத் தலைவரும், கொலம்பியா பல்கலைக் கழக பொருளாதார பேராசிரியருமான, அர்விந்த் பனாகரியா தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:பன்னாட்டு நிறுவனங்கள், தற்போது சீனாவிலிருந்து வெளியேறி, வேறு இடங்களில், அவர்களது செயல்பாட்டை தொடர விரும்புகின்றன. இந்தியா இந்த சந்தர்ப்பத்தை தவற விட்டுவிடக் கூடாது.தன்னாட்சி பொருளாதார மண்டலங்களை உருவாக்க வேண்டும். ‘அமைதி’ காலத்தில் செயல்படுத்துவதற்கு கடினமாக இருக்கும், நிலம் மற்றும் தொழிலாளர் சந்தை ஆகியவற்றில், சீர்திருத்தங்களை செய்வதற்கு, அரசுக்கு நல்ல வாய்ப்பை இந்த நெருக்கடி சூழல் உருவாக்கி உள்ளது.மேலும், 70 ஆண்டுகால முன்னேற்ற முயற்சிகளுக்கு பிறகும், தொழிலாளர்கள் மிக சிறிய நிறுவனங்களிலேயே பணிபுரிகின்றனர்.
இந்த வைரஸ் தாக்கம், அதிக உற்பத்தி, சிறந்த ஊதியம் கொண்ட வேலைகளுக்கு தொழிலாளர்களை மாற்ற வேண்டும் என்பதை தெளிவுபடுத்தி உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|