புதிய தனிநபர் பாலிசி எல்.ஐ.சி., சாதனை புதிய தனிநபர் பாலிசி எல்.ஐ.சி., சாதனை ...  வெளிநாடுகளுக்கு மருந்தை அனுப்ப புளூ டார்ட் புதிய சேவை வெளிநாடுகளுக்கு மருந்தை அனுப்ப புளூ டார்ட் புதிய சேவை ...
தடையால் நபர் ஒன்றுக்கு 7,000 ரூபாய் இழப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2020
22:49

புதுடில்லி : உள்நாட்டு தர நிர்ணய நிறுவனமான, கிரிசில், நடப்பு நிதியாண்டில், நாட்டின் உள்நாட்டு வளர்ச்சி, 1.8 சதவீதமாக இருக்கும், என, அறிவித்து உள்ளது.

மேலும், நோய் தொற்று பரவாமல் இருக்க, நாடு முடக்கப்பட்டதால், 10 லட்சம் கோடி ரூபாய் அல்லது நபர் ஒன்றுக்கு, 7 ஆயிரம் ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது. துவக்கத்தில், நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி, 6 சதவீதமாக இருக்கும் என, இந்நிறுவனம் கணித்திருந்தது.அதன் பின்னர், கடந்த மார்ச் இறுதியில், 3.5 சதவீதமாக குறைத்து அறிவித்தது. தற்போது அதையும் பாதியாக்கி, 1.8 சதவீதமாக அறிவித்து உள்ளது. அரசின் தடை அறிவிப்பு, பொருளாதாரத்தில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும்; அது, அரசின் நிவாரண நடவடிக்கைகளையும் மீறி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிரந்தரமான இழப்பு, வேலைவாய்ப்பின்மை, வறுமை ஆகிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் கிரிசில் எச்சரித்துள்ளது.

பணவீக்கத்தை பொறுத்தவரை, நடப்பு நிதியாண்டின் இறுதியில், அரசின் சவுகரியமான இலக்கை பெரிதாக மீறாமல், 4.4 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என, தெரிவித்துள்ளது. அத்துடன், ரூபாயின் மதிப்பு, டாலருக்கு எதிராக, 73 ரூபாயாக இருக்கும் என்றும், நடப்புக் கணக்கு பற்றாக்குறை, நடப்பு நிதியாண்டில், கடந்த நிதியாண்டை விட, 0.2 முதல், 1 சதவீதம் வரை குறைவாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், தற்போது வழங்கப் பட்டிருக்கும் நிதி சலுகைகள் போதுமானதாக இல்லை என்றும் தெரிவித்து உள்ளது.நாட்டில், 38 சதவீதம் பேர், தகுதி வாய்ந்த வேலை ஒப்பந்தம் இல்லாதவர்கள் என்றும், தடை மேலும் நீட்டிக்கப்படும் பட்சத்தில், இவர்கள் நிரந்தர வேலை இழப்பை சந்திக்கக் கூடும் என்றும், கிரிசில் எச்சரித்து உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)