பதிவு செய்த நாள்
29 ஏப்2020
23:39
சென்னை: மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், ஆறு மாத காலத்துக்கு, ஜி.எஸ்.டி., வரி செலுத்துவதிலிருந்து விலக்கு வழங்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன.
இது குறித்து, தமிழ்நாடு மருந்து தயாரிப்பாளர்கள் மற்றும் சந்தைப்படுத்துபவர்கள் சங்கமான, சி.ஐ.பி.எம்.எம்.ஏ., தெரிவித்துள்ளதாவது:பதிவு பெற்ற, 500 நிறுவனங்கள், மிகவும் நெருக்கடியில் உள்ளன. இவை தங்களது சொந்த தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்தலில் ஈடுபட்டுஉள்ளன.தடை காரணமாக, மருந்துகளின் விற்பனை சரிந்துள்ளது. விற்பனை பிரதிநிதிகளுக்கு மருத்துவ மனை, கிளினிக்குகளில் பணியாற்றும் மருத்துவர்களை சந்திக்க முடிவதில்லை.
இது போன்ற காரணங்களினால், ஆறு மாதங்களுக்கு, ஜி.எஸ்.டி., செலுத்துவதில் விலக்கு அல்லது சலுகை வழங்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|