தொற்று நோயால் துவளும் இந்திய ஓட்டல் துறைதொற்று நோயால் துவளும் இந்திய ஓட்டல் துறை ... 'டிஜிட்டல்' மயமாகும் மளிகை கடைகள் 'டிஜிட்டல்' மயமாகும் மளிகை கடைகள் ...
ரூ.15 ஆயிரம் கோடி இழப்பை செய்தித்தாள் துறை சந்திக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2020
23:16

புது­டில்லி:செய்­தித்­தாள் துறைக்கு, உரிய நிவா­ர­ணம் வழங்­கப்­ப­டா­விட்­டால், துறை­யா­னது,
15 ஆயி­ரம் கோடி ரூபாய் வரை இழப்பை சந்திக்க நேரி­டும் என, ’இந்திய செய்­தித்­தாள் சங்கம்’ தெரி­வித்­து உள்ளது.

நாடு முடக்­கப்­பட்டிருக்கும் நிலை­யில், இது­வரை செய்­தித்­தாள் துறை, 4 ஆயி­ரம் கோடி ரூபாய் இழப்பை சந்­தித்­து உள்­ளது.மேலும், அடுத்த ஆறிலிருந்து, ஏழு மாதங்­களில் இழப்பு,
15 ஆயி­ரம் கோடி ரூபாய் வரை அதி­க­ரிக்­கும் வாய்ப்பு உள்­ளது என்­றும் தெரி­வித்­துள்­ளது.

சிர­மம்

இது குறித்து, தக­வல் மற்­றும் ஒளி­ப­ரப்­புத்­துறை செய­ல­ருக்கு, இந்­திய செய்­தித்­தாள்
சங்­கத்­தின் தலை­வர் ஷைலேஷ் குப்தா எழு­திய கடி­தத்­தில், மேலும் தெரி­விக்­கப்­பட்­டுஉள்­ள­தாவது:நாடு முடக்­கப்­பட்­டதை அடுத்து, மிக­வும் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கும் துறை­களில், செய்­தித்­தாள் துறை­யும் ஒன்­றா­கும். விளம்­ப­ரங்­கள் மற்­றும் வினி­யோ­கம் மூலம் வரு­வாய் சரிந்து, மிக­வும் பாதிப்­புக்கு உள்ளாகி இருக்­கிறது.

கடந்த இரண்டு மாதங்­களில், இத்­து­றை­யா­னது, 4 ஆயி­ரத்­தி­லி­ருந்து, 4,500 கோடி ரூபாய் இழப்பை சந்­தித்­துள்­ளது.நாட்­டின் பொரு­ளா­தாரம் மிக­வும் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில்,
தனி­யார் விளம்­ப­ரங்­கள் வரு­வ­தும் சிர­ம­மாகி உள்ளது.இந்நிலை­யில், அர­சின் ஊக்­கச்
சலு­கை­கள் இல்­லா­விட்­டால், அடுத்த ஆறு முதல் ஏழு மாதங்­களில், மேலும்,
12 ஆயி­ரத்­தி­லி­ருந்து, 15 ஆயி­ரம் கோடி ரூபாய் வரை இழப்பை சந்­திக்க வேண்­டிய நிலை
ஏற்­படும்.இவ்­வாறு ஷைலேஷ் குப்தா கடி­தத்­தில் தெரிவித்து இ­ருக்­கி­றார்.

மேலும், இத்­த­ரு­ணத்­தில், அரசு, அச்­சுக் காகி­தத்­தின் மீதான, 5 சத­வீத சுங்க வரியை திரும்ப பெற வேண்­டும் என்­றும், கோரிக்கை வைக்­கப்­பட்­டு உள்­ளது.தயா­ரிப்­பு செல­வில், 40 முதல், 60 சத­வீ­தம் வரை, அச்­சுக் காகி­தத்­திற்கே செல­வா­கி­வி­டு­வ­தா­க­வும், இந்­நி­லை­யில், 5 சத­வீத சுங்க வரியை நீக்­கு­வ­தால், உள்­நாட்டு தயா­ரிப்­பாளர்­களோ, ‘இந்தி­யா­வில் தயாரிப்­போம்’
திட்­டத்­திற்கோ, பெரி­தாக எந்த பாதிப்­பும் வந்­து­விடாது என தெரி­வித்­துள்­ளது, இந்திய
செய்­தித்­தாள் சங்­கம்.


கோரிக்கை

மேலும், இரண்டு ஆண்டு காலத்­துக்கு, செய்­தித்­தாள் நிறு­வ­னங்­க­ளுக்கு, வரி விடு­முறை வழங்க வேண்­டும் என்றும் கோரிக்கை வைக்­கப்­பட்­டுள்­ளது.அத்­து­டன், விளம்­பர கட்­டண விகி­தத்­தில், 50 சத­வீ­தம் உயர்த்தி வழங்­க­வும், அச்சு ஊட­கங்­க­ளுக்­கான பட்­ஜெட்
செல­வி­னங்­களில், 100 சத­வீ­தம் அதி­க­ரிக்­க­வும் அர­சி­டம் கோரிக்கை வைக்­கப்­பட்­டுள்­ளது.இந்­திய செய்­தித்­தாள் துறை­யில், சங்­கத்­தின் மதிப்­பீட்­டின்­படி, 9 முதல், 10 லட்­சம் பேர் நேரடி வேலை­வாய்ப்­பி­லும், 18 முதல், 20 லட்­சம் பேர், மறை­முக வேலை­வாய்ப்பை­யும் பெற்­று உள்ள­னர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)