பதிவு செய்த நாள்
03 மே2020
09:44
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 9.9 சதவிகித பங்குகளை 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் ஏறத்தாழ 43 ஆயிரத்து 574 கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கி இருக்கும் செய்திதான் கடந்த வார 'ஹாட் நியூஸ்'.
அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் ஆன்லைன் வியாபாரத்தில் வந்தபின் தங்கள் வியாபாரங்கள் குறைந்து விட்டதாக பல சிறு வியாபாரிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். காரணம் அமேசான், பிளிப்கார்ட் மாடல் பொருட்களை மொத்தமாக வாங்கி அதை தங்களது கூரியர் மூலமாக அனுப்புவது. இரண்டாவது பல மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளை தங்களுடன் இணைத்து கொண்டு தகுந்த 'டிஸ்கவுண்ட்' கொடுத்து வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு கூரியரில் அனுப்ப சொல்வது. இது இரண்டும் நம்ம ஊர் சிறிய மளிகை கடைகளுக்கு பொருந்ததாக மாடலாக இருந்தது.இந்த கொரோனா காலம்தான் அமேசான், பிளிப்கார்ட் மாடல்களையெல்லாம் காணாமல் போக செய்து விட்டது. சிறிய மளிகை கடைகளை திறந்து வைத்திருந்தனர். மக்களுக்கு ஆபத்பாந்தவானாக இருந்தார்கள். இதனால் அவர்கள் மீது மக்களுக்கு ஒரு அபரிதமான நம்பிக்கை தற்போது வந்திருக்கிறது.
சிறு வியாபாரிகளை சப்போர்ட் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் மக்களிடையே இருக்கிறது. இந்த சரியான சமயத்தில் தான் ரிலையன்ஸும் 'வாட்ஸ்ஆப்'பும் ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண்டனர்.எப்படி செயல்படுகிறதுதற்போது நவி மும்பை, தானே, கல்யாண் ஆகிய பகுதிகளில் மட்டும் சோதனை முறையில் துவக்கப்பட்டுள்ளது. நீங்கள் ரிலையன்சின் 'வாட்ஸ் ஆப்' பிசினஸ் செயலிக்கு ஒரு 'ஹாய்' என்று ஒரு மெசேஜ் அனுப்ப வேண்டும். என்னென்ன பொருட்கள் தற்போது கிடைக்கின்றன என்ற ஒரு லிஸ்ட் வரும். தேவையான பொருட்களை 'டிக்' செய்து திருப்பி அனுப்பினால் ரிலையன்ஸ் ஜியோ மார்ட் உங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள தங்களிடம் ஒப்பந்தம் செய்திருக்கும் மளிகை கடைக்கு அனுப்பி அந்தப் பொருட்களை ரெடியாக வைத்திருக்க சொல்லும்.
இரண்டு நாட்களுக்குள் அங்கு சென்று வாங்கி கொள்ளலாம். இதற்காக 1200 சிறிய கடைகளை ரிலையன்ஸ் தங்களுடன் இணைத்து கொண்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவில் 38 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். இந்தியாவில் 40 கோடி பேர் 'வாட்ஸ் ஆப்' பயன்படுத்துகின்றனர். இதுதான் தற்போது இவர்களின் பலம்.
சிறிய கடைகளுக்கு லாபமா... நஷ்டமா
நிச்சயம் சிறிய 'டிஸ்கவுண்ட்' கொடுக்க வேண்டியிருக்கும். அதை ரிலையன்ஸ் நிர்ணயிக்கும். உங்களுடைய வியாபாரங்கள் உங்கள் ஏரியா தவிர இன்னும் சிறிய துாரத்துக்கு விரிவுபடுத்த இதன் மூலம் சாத்தியப்படும்.வருங்காலங்களில் குறிப்பிடும் ஏரியாக்களில் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு பொருட்களை டெலிவரி செய்ய வேண்டியிருக்கும். ரிலையன்ஸுக்கு சப்ளை செய்வதால் வங்கிகள் மூலம் அவர்கள் உங்கள் வியாபாரத்தை பெருக்க கடன்கள் பெற்றுத்தர வழி கிடைக்கும்.
- சேதுராமன் சாத்தப்பன் -
சந்தேகங்களுக்கு: sethuraman.sathappan@gmail.com
அலைபேசி: 98204 51259
இணையதளம் www.startup buisnessnews.com
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|