ரூ.15 ஆயிரம் கோடி இழப்பை செய்தித்தாள் துறை சந்திக்கும் ரூ.15 ஆயிரம் கோடி இழப்பை செய்தித்தாள் துறை சந்திக்கும் ... காப்பீடு பெற எளிய கே.ஒய்.சி., செயல்முறை காப்பீடு பெற எளிய கே.ஒய்.சி., செயல்முறை ...
'டிஜிட்டல்' மயமாகும் மளிகை கடைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 மே
2020
09:44

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 9.9 சதவிகித பங்குகளை 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் ஏறத்தாழ 43 ஆயிரத்து 574 கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கி இருக்கும் செய்திதான் கடந்த வார 'ஹாட் நியூஸ்'.

அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் ஆன்லைன் வியாபாரத்தில் வந்தபின் தங்கள் வியாபாரங்கள் குறைந்து விட்டதாக பல சிறு வியாபாரிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். காரணம் அமேசான், பிளிப்கார்ட் மாடல் பொருட்களை மொத்தமாக வாங்கி அதை தங்களது கூரியர் மூலமாக அனுப்புவது. இரண்டாவது பல மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளை தங்களுடன் இணைத்து கொண்டு தகுந்த 'டிஸ்கவுண்ட்' கொடுத்து வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு கூரியரில் அனுப்ப சொல்வது. இது இரண்டும் நம்ம ஊர் சிறிய மளிகை கடைகளுக்கு பொருந்ததாக மாடலாக இருந்தது.இந்த கொரோனா காலம்தான் அமேசான், பிளிப்கார்ட் மாடல்களையெல்லாம் காணாமல் போக செய்து விட்டது. சிறிய மளிகை கடைகளை திறந்து வைத்திருந்தனர். மக்களுக்கு ஆபத்பாந்தவானாக இருந்தார்கள். இதனால் அவர்கள் மீது மக்களுக்கு ஒரு அபரிதமான நம்பிக்கை தற்போது வந்திருக்கிறது.

சிறு வியாபாரிகளை சப்போர்ட் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் மக்களிடையே இருக்கிறது. இந்த சரியான சமயத்தில் தான் ரிலையன்ஸும் 'வாட்ஸ்ஆப்'பும் ஒப்பந்தம் ஏற்படுத்தி கொண்டனர்.எப்படி செயல்படுகிறதுதற்போது நவி மும்பை, தானே, கல்யாண் ஆகிய பகுதிகளில் மட்டும் சோதனை முறையில் துவக்கப்பட்டுள்ளது. நீங்கள் ரிலையன்சின் 'வாட்ஸ் ஆப்' பிசினஸ் செயலிக்கு ஒரு 'ஹாய்' என்று ஒரு மெசேஜ் அனுப்ப வேண்டும். என்னென்ன பொருட்கள் தற்போது கிடைக்கின்றன என்ற ஒரு லிஸ்ட் வரும். தேவையான பொருட்களை 'டிக்' செய்து திருப்பி அனுப்பினால் ரிலையன்ஸ் ஜியோ மார்ட் உங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள தங்களிடம் ஒப்பந்தம் செய்திருக்கும் மளிகை கடைக்கு அனுப்பி அந்தப் பொருட்களை ரெடியாக வைத்திருக்க சொல்லும்.

இரண்டு நாட்களுக்குள் அங்கு சென்று வாங்கி கொள்ளலாம். இதற்காக 1200 சிறிய கடைகளை ரிலையன்ஸ் தங்களுடன் இணைத்து கொண்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவில் 38 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். இந்தியாவில் 40 கோடி பேர் 'வாட்ஸ் ஆப்' பயன்படுத்துகின்றனர். இதுதான் தற்போது இவர்களின் பலம்.
சிறிய கடைகளுக்கு லாபமா... நஷ்டமா
நிச்சயம் சிறிய 'டிஸ்கவுண்ட்' கொடுக்க வேண்டியிருக்கும். அதை ரிலையன்ஸ் நிர்ணயிக்கும். உங்களுடைய வியாபாரங்கள் உங்கள் ஏரியா தவிர இன்னும் சிறிய துாரத்துக்கு விரிவுபடுத்த இதன் மூலம் சாத்தியப்படும்.வருங்காலங்களில் குறிப்பிடும் ஏரியாக்களில் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு பொருட்களை டெலிவரி செய்ய வேண்டியிருக்கும். ரிலையன்ஸுக்கு சப்ளை செய்வதால் வங்கிகள் மூலம் அவர்கள் உங்கள் வியாபாரத்தை பெருக்க கடன்கள் பெற்றுத்தர வழி கிடைக்கும்.
- சேதுராமன் சாத்தப்பன் -
சந்தேகங்களுக்கு: sethuraman.sathappan@gmail.com
அலைபேசி: 98204 51259
இணையதளம் www.startup buisnessnews.com

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)