பதிவு செய்த நாள்
04 மே2020
14:16
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடட் மற்றும் ஜியோ பிளாட்பாம்கள் ரூ.5655 கோடியை ஜியோ பிளாட்பார்மில் முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஜியோ பிளாட்பார்ம், ரூ. 4.90 லட்சம் கோடி பணத்தை பங்கு மதிப்பிலும், ரூ.5.15 லட்சம் கோடி ரூபாயை நிறுவன மதிப்பிலும், 12.5 சதவீதம் பங்கு மதிப்பை பேஸ்புக்கிலும் முதலீடு செய்யவுள்ளதாக கடத்த ஏப்., 22ம் தேதி அறிவித்து இருந்தது. அடுத்த தலைமுறை தொழில்நுட்ப வளர்ச்சியிலும் ஜியோ பிளாட்பார்ம் முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்து இருந்தது. ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் தனது 388 மில்லியன் சப்ஸ்கிரைபர்களுக்கு இணைய வசதி செய்து தருவதாக கூறி இருந்தது.
கடந்த ஏப்., 22ம் தேதி பேஸ்புக் நிறுவனம் ஜியோ பிளாட்பார்மின் 9.9 சதவீத பங்குகளை ரூ.43,574 கோடிக்கு வாங்க இருப்பதாகவும் இதன்மூலம் ரிலையன்ஸின் கடன்களை அடைக்க உதவ இருப்பதாகவும் தெரிவித்து இருந்தது.
பிரபல அமெரிக்க பங்கு வர்த்தக நிறுவனம் சில்வர் லேக். தொழிநுட்பம் மற்றும் நிதித்துறையில் இது முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது. இது தற்போது அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது.
வாடிக்கையாளர்களைக் கவர சிறு டிஜிட்டல் சேவைகளை ஊக்குவிக்கும் வகையில் ஜியோ பிளாட்பார்ம் சிறந்த தொழில்நுட்ப வசதிகளை செய்து கொடுத்துள்ளது. ஜியோ பிளாட்பார்ம் அதீத வளர்ச்சி கண்டுள்ளது என சில்வர் லேக் சிஇஒ எகான் டர்பன் தெரிவித்துள்ளார்.
மார்ச் 31, 2021-க்குள் ஜியோ நிறுவனம் தன் கடன்களை அடைத்து டிஜிட்டல் சேவைகளை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. சில்வர் லேக் மற்றும் ஜியோ நிறுவனங்கள் இணைந்து செயல்படுவது பொருளாதார வளைவு நெளிவுகளுக்கு எதுவாக இருக்கும். இவ்வாறு மூடி நிறுவன கார்பரேட் நிதித்துறை துணை தலைவர் விகாஸ் ஹலன் தெரிவித்துள்ளார்.
இவர்களது இந்த கூட்டு முயற்சி மார்ச் 31, 2020 வரை 21.4 பில்லியன் டாலர் கடனை 13.6 பில்லியன் டாலராக குறைக்கும் என அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலமாக முன்னணி தொழில்நுட்பங்களான அதிநவீன டேட்டா கனெக்டிவிடி, கிளட் மற்றும் எட்ஜ் கம்ப்யூட்டிங், தகவல் ஆய்வு, செயற்கை நுண்ணறிவு, ஆகுமெண்டட் மற்றும் மிக்ஸட் ரியாலிட்டி, பிளாக் செய்ன் உள்ளிட்டவை மேம்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|