பதிவு செய்த நாள்
04 மே2020
22:38
புதுடில்லி:'ரிலையன்ஸ் ஜியோ பிளாட்பார்ம்' நிறுவனத்தில், 'பேஸ்புக்'கை அடுத்து, அமெரிக்காவைச் சேர்ந்த, 'சில்வர் லேக்' நிறுவனமும், முதலீட்டை மேற்கொள்ள இருக்கிறது.
முகேஷ் அம்பானியின், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசின் அங்கமான, ஜியோ பிளாட்பார்மில், தொழில்நுட்ப முதலீட்டு நிறுவனமான, சில்வர் லேக், 5,655.75 கோடி ரூபாயை முதலீடு செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. இதனையடுத்து, சில்வர் லேக் வசம், ஜியோ பிளாட்பார்மின், 1.15 சதவீத பங்குகள் வரும்.அண்மையில், பேஸ்புக் நிறுவனம், ஜியோவின், 9.99 சதவீத பங்குகளை, 43 ஆயிரத்து, 574 கோடி ரூபாய்க்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக் நிறுவனத்தின் முதலீட்டை அடுத்து, சில்வர் லேக் நிறுவனமும் முதலீடு செய்து இருப்பது, வணிக உலகில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம், குறுகிய காலத்தில், ஜியோ நிறுவனம், தன் சந்தை மதிப்பை தொடர்ந்து உயர்த்தி வருகிறது.இது குறித்து, ரிலையன்ஸ் தெரிவித்துள்ளதாவது:
சில்வர் லேக், ஜியோவில் 5,655.75 கோடி ரூபாயை முதலீடு செய்கிறது.இந்த முதலீட்டின் படி, ஜியோ தளத்தின் மொத்த பங்கு மதிப்பு, 4.90 லட்சம் கோடி ரூபாயாகவும், நிறுவனத்தின் மதிப்பு, 5.15 லட்சம் கோடி ரூபாயாகவும் இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பேஸ்புக் நிறுவனம் முதலீடு செய்தபோது இருந்ததை விட, பங்கு மதிப்பு, 12.5 சதவீதம் அதிகம் மதிப்பிடப்பட்டுள்ளது.
சில்வர் லேக் நிறுவனம், ஆல்பபெட், வெய்போ, டுவிட்டர், அலிபாபா உள்ளிட்ட பல முன்னணி சர்வதேச நிறுவனங்களில், 40 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீட்டைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|