பதிவு செய்த நாள்
05 மே2020
23:02
புதுடில்லி:சமையலறை சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, ‘ஸ்டவ் கிராப்ட்’ நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ அனுமதி வழங்கியுள்ளது.
ஸ்டவ் கிராப்ட் நிறுவனம், கடந்த பிப்ரவரியில், பங்கு விற்பனைக்கு வருவதற்காக, செபியிடம் விண்ணப்பம் செய்திருந்தது; தற்போது அனுமதி கிடைத்துள்ளது.பங்கு வெளியீட்டின் போது, ஸ்டவ் கிராப்ட் நிறுவனம், 145 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளை வெளியிட இருக்கிறது. அத்துடன், நிறுவனர்களின், 71.63 லட்சம் பங்குகளையும் விற்பனை செய்ய இருக்கிறது.
இதில், நிறுவனர் ராஜேந்திர காந்தியின், 6.41 லட்சம் பங்குகள்; சுனிதா ராஜேந்திராவின், 2.5 லட்சம் பங்குகளும் அடக்கம். மேலும், ‘சிகோயா கேப்பிட்டல் இந்தியா குரோத் இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்ஸ்’ நிறுவனம் வசம் இருக்கும், 13.11 லட்சம் பங்குகள்; ‘எஸ்.சி.ஐ., குரோத் இன்வெஸ்ட்மென்ட்ஸ்’ நிறுவனத்தின் வசம் இருக்கும், 49.61 லட்சம் பங்குகளும் விற்பனைக்கு விடப்பட உள்ளன.
இந்த பங்கு வெளியீட்டிற்கான பணிகளை, ‘எடெல்வைஸ் பைனான்ஷியல் சர்வீசஸ்’ நிறுவனமும், ‘ஜே.எம்., பைனான்ஷியல்’நிறுவனமும் நிர்வகிக்கின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|