பதிவு செய்த நாள்
05 மே2020
23:42
புதுடில்லி:மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் பணப்புழக்க சிக்கலை தீர்க்கும் வகையில், ரிசர்வ் வங்கி சமீபத்தில், 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சிறப்பு திட்டம் ஒன்றை அறிவித்தது. இதில், 4,509 கோடி ரூபாய் மட்டுமே, மியூச்சுவல் பண்டுகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், ரிசர்வ் வங்கியிடம் புதிய கோரிக்கையை, அந்த நிறுவனங்கள் முன்வைத்துள்ளன.
மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், தங்களிடம் இருக்கும் உடனடியாக விற்க இயலாத பத்திரங்களை வாங்குவதற்கு வசதி யாக, தனியாக, ‘சிறப்பு நோக்க வசதி’யை அறிமுகம் செய்ய வேண்டும் என, ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை வைத்துள்ளன.‘பிராங்க்ளின் டெம்பிள்டன் இந்தியா மியூச்சுவல் பண்டு’ நிறுவனம், அதன், ஆறு கடன் சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களை முடக்கி விட்டதாக, சமீபத்தில் திடீரென அறிவித்தது.
இதையடுத்து, துறையில் பணப்புழக்க சிக்கல்கள் ஏற்படவும், கடந்த மாதம், 27 அன்று, 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கான சிறப்பு திட்டத்தை, ரிசர்வ் வங்கி அறிவித்தது.இருப்பினும், நேற்று முன்தினம் நிலவரப்படி, 50 ஆயிரம் கோடி ரூபாயில், 4,509 கோடி ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணம், வங்கிகள், ஏ.ஏ.ஏ., எனும், அதிகபட்ச ரேட்டிங் இல்லாத பத்திரங்களுக்கு கடன் வசதி தர தயங்குவது தான் என்பது தெரிய வந்தது.இதையடுத்து, சிறப்பு நோக்கு வசதியை ஏற்படுத்தி, அதன் மூலம் நேரடியாக கடனுதவி வழங்க வேண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|