அமெரிக்க நிறுவனங்களை ஈர்க்க முயற்சி:சீனாவிலுள்ள 1,000 நிறுவனங்களுடன் மத்திய அரசு பேச்சு அமெரிக்க நிறுவனங்களை ஈர்க்க முயற்சி:சீனாவிலுள்ள 1,000 நிறுவனங்களுடன் ... ...  ஜியோவில், 'விஸ்டா' நிறுவனம் ரூ.11,367 கோடி முதலீடு ஜியோவில், 'விஸ்டா' நிறுவனம் ரூ.11,367 கோடி முதலீடு ...
ரசாயன தொழிற்சாலைகள் தமிழகத்தில் தொடர்ந்து செயல்படும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2020
23:22

சென்னை:தமிழகத்தில், ரசாயன உற்பத்தி பெரு நிறுவன தொழிற்சாலைகள், குறைந்த அளவு ஊழியர்களுடன் தொடர்ந்து இயங்குவதாக, தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி வழங்கிய நிலையில், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில், எல்.ஜி., பாலிமர்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் வாயு கசிந்து, விபத்து ஏற்பட்டது. இதில், பலர் உயிரிழந்தனர்.இந்நிலையில், தமிழகத்தில், நுாற்றுக் கணக்கான ரசாயனத் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இவற்றின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்து உள்ளன.

அனுமதி

தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:ரசாயனத் தொழிற்சாலைகள் தொடர்ந்து செயல் படக் கூடியவை. இவற்றை நிறுத்தினால், பெரிய பிரச்னை வரும் என, ரசாயன தொழிற்சாலை கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டன.மத்திய அரசும், ரசாயனத் தொழிற்சாலைகளை தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கியது.இதனால், தமிழகத்தில் ரசாயனத் தொழிற்சாலைகள், குறைந்த அளவு தொழிலாளர்களுடன், தொடர்ந்து இயங்கி வருகின்றன. இதனால், அவற்றால் எந்த பாதிப்பும் கிடையாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


இது குறித்து, ரசாயனத் தொழிற்சாலைகள் சங்கத் தலைவர் இளநகை கூறியதாவது: தொடர்ந்து செயல்பட வேண்டும் என்ற பிரிவின் கீழ் வரும், ரசாயனத் தொழிற்சாலைகள் தமிழகத்தில், 40க்கும் அதிகமானவை உள்ளன.இவை, சென்னை, துாத்துக்குடி, கடலுார், ராணிப்பேட்டை ஆகிய சிப்காட் தொழில்பூங்காக்களில் செயல்படுகின்றன.


கட்டாயம்

இந்த தொழிற்சாலைகள் ஊரடங்கு துவங்கிய நாட்களிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. மருந்து தயாரிப்பதற்கான வேதிப்பொருட்கள், உரம் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் போன்றவைகளுக்கு, ரசாயன தொழிற்சாலைகள் இயங்குவது கட்டாயம்.
எனவே, இவை தொடர்ந்து செயல்படுகின்றன.ஆனால், இரண்டாம் கட்டத்தில் உள்ள, சிறிய அளவிலான ரசாயனத் தொழிற்சாலைகள் செயல்படவில்லை. அவை செயல்பட அரசு அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)