பதிவு செய்த நாள்
08 மே2020
23:22
சென்னை:தமிழகத்தில், ரசாயன உற்பத்தி பெரு நிறுவன தொழிற்சாலைகள், குறைந்த அளவு ஊழியர்களுடன் தொடர்ந்து இயங்குவதாக, தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி வழங்கிய நிலையில், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில், எல்.ஜி., பாலிமர்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் வாயு கசிந்து, விபத்து ஏற்பட்டது. இதில், பலர் உயிரிழந்தனர்.இந்நிலையில், தமிழகத்தில், நுாற்றுக் கணக்கான ரசாயனத் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இவற்றின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்து உள்ளன.
அனுமதி
தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது:ரசாயனத் தொழிற்சாலைகள் தொடர்ந்து செயல் படக் கூடியவை. இவற்றை நிறுத்தினால், பெரிய பிரச்னை வரும் என, ரசாயன தொழிற்சாலை கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டன.மத்திய அரசும், ரசாயனத் தொழிற்சாலைகளை தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்கியது.இதனால், தமிழகத்தில் ரசாயனத் தொழிற்சாலைகள், குறைந்த அளவு தொழிலாளர்களுடன், தொடர்ந்து இயங்கி வருகின்றன. இதனால், அவற்றால் எந்த பாதிப்பும் கிடையாது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, ரசாயனத் தொழிற்சாலைகள் சங்கத் தலைவர் இளநகை கூறியதாவது: தொடர்ந்து செயல்பட வேண்டும் என்ற பிரிவின் கீழ் வரும், ரசாயனத் தொழிற்சாலைகள் தமிழகத்தில், 40க்கும் அதிகமானவை உள்ளன.இவை, சென்னை, துாத்துக்குடி, கடலுார், ராணிப்பேட்டை ஆகிய சிப்காட் தொழில்பூங்காக்களில் செயல்படுகின்றன.
கட்டாயம்
இந்த தொழிற்சாலைகள் ஊரடங்கு துவங்கிய நாட்களிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. மருந்து தயாரிப்பதற்கான வேதிப்பொருட்கள், உரம் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் போன்றவைகளுக்கு, ரசாயன தொழிற்சாலைகள் இயங்குவது கட்டாயம்.
எனவே, இவை தொடர்ந்து செயல்படுகின்றன.ஆனால், இரண்டாம் கட்டத்தில் உள்ள, சிறிய அளவிலான ரசாயனத் தொழிற்சாலைகள் செயல்படவில்லை. அவை செயல்பட அரசு அனுமதி அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|