பதிவு செய்த நாள்
08 மே2020
23:37
மும்பை:நடப்பு நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம், பூஜ்ஜியமாக இருக்கும் என, மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் நிதிப் பற்றாக்குறை, அரசின் கடன் ஆகியவை அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம், மூடிஸ், நடப்பு ஆண்டில் வளர்ச்சி, 0.2 சதவீதமாக இருக்கும் என்று கணித்து இருந்தது. இது குறித்து இந்தநிறுவனம் தெரிவித்து உள்ளதாவது:கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்தும் முயற்சியாக நாடு முடக்கப்பட்டதை அடுத்து, நடப்பு நிதியாண்டில், நாட்டின் வளர்ச்சி பூஜ்ஜியமாக இருக்கும்.
அதாவது பொருளாதார வளர்ச்சி ஏதுமின்றி இருக்கும். அதே சமயம், அடுத்த நிதியாண்டை பொறுத்தவரை, வளர்ச்சி அதிகரித்து, 6.6 சதவீதமாக இருக்கும்.இவ்வாறு அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|