பதிவு செய்த நாள்
09 மே2020
23:22
மும்பை:நடப்பு
நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 0.4 சதவீதமாக
குறைந்து இருக்கும் என, இரண்டு முக்கியமான வெளிநாட்டு தரகு நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன.
ஜப்பானை
சேர்ந்த தரகு நிறுவனமான, ’நோமுரா’ மற்றும் அமெரிக்காவை சேர்ந்த தரகு
நிறுவனமான, ’கோல்டுமேன் சாக்ஸ்’ ஆகிய நிறுவனங்கள், இவ்வாறு
நாட்டின் வளர்ச்சியை மதிப்பிட்டு உள்ளன.
மைனஸ் 2
அத்துடன்,
ரிசர்வ் வங்கி, பொருளாதார சரிவை தடுக்கும் வகையில், மேலும், 1
சதவீதம் அளவுக்கு வட்டியை குறைக்கும் என்றும் கோல்டுமேன் சாக்ஸ்
தெரிவித்துள்ளது.கிட்டத்தட்ட அனைத்து பகுப்பாய்வு
நிறுவனங்களும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கொரோனா வைரஸ்
பாதிப்பினால், மிகவும் சரிவை சந்திக்கும் என, தெரிவித்துவருகின்றன.
அண்மையில், ‘இக்ரா’ நிறுவனம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், மைனஸ் இரண்டு சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது. அதேபோல், ‘மூடிஸ்’
நிறுவனமும், அண்மையில், நாட்டின்பொருளாதார வளர்ச்சி, பூஜ்ஜியமாக இருக்கும் என்று கணித்துஅறிவித்திருந்தது.
மேலும் 1 சதவீதம்இந்நிலையில்,
கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது
காலாண்டில், வளர்ச்சி, மைனஸ் 20 சதவீதமாக இருக்கும் என்று
எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது. எனினும், அடுத்து வரும்
காலாண்டுகளில் வளர்ச்சி
அதிகரிக்கும் என்றும்தெரிவித்துள்ளது.
இந்த நிலையை சமாளிக்கும் விதமாக, ரிசர்வ் வங்கி, மேலும், 1சதவீதம் அளவுக்கு, வட்டி
குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று எதிர்பார்ப்பதாகவும், கோல்டுமேன் சாக்ஸ்
தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|