பதிவு செய்த நாள்
10 மே2020
23:53
கொரோனா பாதிப்புக்கு மத்தியில் பலரும், ‘டிஜிட்டல்’ பரிவர்த்தனை வசதியை அதிகம் நாடி வருகின்றனர். பில் செலுத்துவது, பிரிமியம் செலுத்துவது போன்றவற்றை வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் முறையில் செலுத்த முடிகிறது. இந்நிலையில், ‘கிரெடிட் கார்டு’ மூலம் வீட்டுவாடகை செலுத்தும் வசதியும் அறிமுகம் ஆகியிருக்கிறது.
இது எந்த அளவு பயன் மிக்கது என பார்க்கலாம்:
வாடகை வசதி:
கிரெடிட் கார்டு மூலம் வர்த்தக மையங்களில் பொருட்கள் வாங்கலாம், இணைய ஷாப்பிங்கிற்கும்பயன்படுத்தலாம். கிரெடிட் கார்டு மூலம் ஏ.டி.எம்.களில் ரொக்கம்
எடுக்கலாம். ஆனால், வீட்டு வாடகையை கிரெடிட் கார்டு மூலம் செலுத்தும் வசதி இதுவரை இல்லை. தற்போது இந்த வசதிஅறிமுகம் ஆகியுள்ளது.
புதிய சேவை:
நிதி நுட்ப நிறுவனங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் சேவை நிறுவனங்கள் சில, கிரெடிட் கார்டு மூலம்வாடகை பணம் செலுத்தும் வசதியை வழங்கத் துவங்கியுள்ளன. ஹவுசிங்.காம், நோபுரோக்கர், ரெண்ட்பே உள்ளிட்டஇணைய நிறுவனங்கள் மற்றும் ஒரு சில வங்கிகள்
இந்த வசதியை அளிக்கின்றன.
பண பரிவர்த்தனை:
கார்டு மூலம் வாடகை செலுத்தும் வசதி அளிக்கும் நிறுவனங்கள், வாடகை செலுத்துபவர் மற்றும் வீட்டு உரிமையாளர் இடையே பாலம் போல செயல்படுகின்றன. வாடகை தொகை, வீட்டு உரிமையாளர் வங்கி கணக்கிற்குமாற்றப்படுகிறது. எனவே, உரிமையாளர் வங்கி கணக்கு,பான் எண் போன்றவை தெரிய வேண்டும்.
சாதகம் என்ன?
கார்டு மூலம் வாடகை செலுத்துவதுஎளிதானது. இதற்கு சிறிய கட்டணம் பொருந்தும்
என்றாலும்,லாக்டவுன் காலத்தில் பண முடை இருந்தால் இந்த வசதிமிகவும் உதவியாக இருக்கும். மேலும், வாடகை ரிசீதையும்இ – மெயிலில் பெறலாம் என்பதால், வரித்தாக்கலின்
போது சமர்ப்பிக்க வசதியாக இருக்கும்.
பாதகம் என்ன?
கார்டு மூலம், வாடகை செலுத்தும் போது,இந்த தொகையை பில் சுழற்சி காலத்திற்குள்
செலுத்த முடியாமல் போனால், வட்டி பாதிப்பு அதிகம் ஏற்படும். இதனால் கடன் சுமை
அதிகரிக்கலாம்.உரிய காலத்தில் பணத்தை செலுத்த முடிந்தால் மட்டுமேஇந்த வசதி
பயனுள்ளதாக அமையும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|