பதிவு செய்த நாள்
11 மே2020
22:42
புதுடில்லி:கடந்த
சில மாதங்களாக, ஆப்பிள் நிறுவன அதிகாரிகளுக்கும், இந்திய அரசு
அதிகாரிகளுக்கும் இடையே தொடர்ந்து நடந்து வந்த பேச்சின் விளைவாக,
ஆப்பிள்
நிறுவனம், சீனாவிலிருந்து வெளியேறி,இந்தியாவில் தயாரிப்புகளை மேற்கொள்வது குறித்த ஆலோசனையில் இறங்கி உள்ளது.
ஆப்பிள்
நிறுவனம், அதன் உற்பத்தித் திறனில், கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு
பகுதியை, சீனாவிலிருந்து, இந்தியாவுக்கு மாற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசித்து வருகிறது.
இது நடந்தால், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளாராக ஆகிவிடும்.
இது குறித்து, அரசின் உயரதிகாரி ஒருவ கூறியதாவது:ஆப்பிள்
நிறுவனம் சம்மதிக்கும் பட்சத்தில், கிட்டத்தட்ட, 3 லட்சம் கோடி
ரூபாய் மதிப்பிலான ஸ்மார்ட்போன்களை, அதன் ஒப்பந்த
தயாரிப்பாளர்களான, விஸ்ட்ரான், பாக்ஸ்கான் ஆகியோர் மூலமாக
ஏற்றுமதி
செய்யும் என, எதிர்பார்க்கலாம்.
இருப்பினும்,
உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை போன்ற சில விஷயங்கள்,
இன்னும் தீர்க்கப்பட வேண்டியதிருக்கிறது. இவை தீர்க்கப்பட்டு
விடும் நிலையில்,
சீனாவிலிருந்து, ஐந்தில் ஒரு பங்கு உற்பத்தி,
இந்தியாவுக்கு மாற்றப்பட்டுவிடும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|