பதிவு செய்த நாள்
13 மே2020
23:11
புதுடில்லி:வேதாந்தா நிறுவனம், இந்திய பங்குச் சந்தைகளிலிருந்து வெளியேறி, தனியார் நிறுவனமாக மாற இருப்பதாக, அந்த நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்து
உள்ளார்.
இந்தியாவின் முன்னணி சுரங்க தொழில் நிறுவனமான வேதாந்தாவுக்கு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் உள்ளிட்ட ஆலைகளும் உள்ளன.வேதாந்தா நிறுவனத்தின், 51.06 சதவீத பங்குகள், தற்போது அதன் தாய் நிறுவனமான, ‘வேதாந்தா ரிசோர்சஸ்’ நிறுவனத்தின் வசம் உள்ளது.மீதமுள்ள, 48.94 பங்குகள் பொது சந்தையில் உள்ள முதலீட்டாளர்கள் வசம் உள்ளன.
இந்நிலையில், பங்குச் சந்தைகளில் உள்ள பங்குகளை, ஒரு பங்கின் விலை, 87.50 ரூபாய் என வாங்க இருப்பதாக, வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், பொது சந்தையில் இருக்கும் வேதாந்தா நிறுவனத்தின் அனைத்து பங்குகளும்,வேதாந்தா குழுமத்தின் கீழ் வர உள்ளது.இதற்கு முன், 2018ல், வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனம், லண்டன் பங்குச்
சந்தையிலிருந்து முழுமையாக வெளியேறியது.
லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் இந்திய நிறுவனம் வேதாந்தா என்பதும் குறிப்பிடத்தக்கது.தற்போது வேதாந்தா நிறுவனம், இந்திய பங்குச் சந்தைகளிலிருந்து
முழுமையாக வெளியேறுகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|