பதிவு செய்த நாள்
13 மே2020
23:14
புதுடில்லி:கடந்த ஏப்ரல் மாதத்துக்கான சில்லரை விலை பணவீக்கம் குறித்த தரவுகளை வெளியிட இயலவில்லை என, மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சில்லரை விலை பணவீக்கம் குறித்த தரவுகளை வெளியிடுவதற்காக, நாட்டின் பல்வேறு மையங்களில், அதிகாரிகள் விலை குறித்த விபரங்களை திரட்டி வழங்குவர்.ஆனால், நாடு முடக்கப்பட்டதை அடுத்து, அதிகாரிகளால் மையங்களுக்கு நேரில் சென்று, விலை குறித்த விபரங்களை திரட்ட முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது.
இந்த காரணத்தினால், குறிப்பிட்ட நாளில் சில்லரை விலை பணவீக்கம் குறித்த தரவுகளை வெளியிட முடியவில்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், தொலைபேசி வாயிலாக திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில், சில்லரை விலை பணவீக்கம் குறித்த தரவுகள் கணக்கிடப்பட்டதாக, மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக, விலை குறித்த விபரங்களை, தேர்ந்தெடுக்கப்பட்ட, 1,114 நகர்ப்புற சந்தைகளிலிருந்தும், 1,181 கிராமப்புற சந்தைகளிலிருந்தும், மத்திய புள்ளியியல் துறை அதிகாரிகள் நேரடியாக பெற்று வழங்குவார்கள். இம்முறை, தொலைபேசி வழியாக பெறப்பட்ட விலை விபரங்களின் படி பால், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றின் சில்லரை விலை பணவீக்கம், மார்ச் மாதத்தை விட, ஏப்ரலில் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.
இருப்பினும், ஏப்ரல் மாதத்துக்கான் சில்லரை விலை பணவீக்கம், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. கடந்த பிப்ரவரி மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம், 5.91 இருந்த நிலையில், மார்ச் மாதத்தில், 5.84 சதவீதமாக குறைந்து இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|