பதிவு செய்த நாள்
04 ஜூன்2020
01:43
சென்னை:அனைவருக்கும் வங்கிச் சேவை மற்றும் நுண்கடன் சந்தை என்ற, தனிப் பிரிவை, பாரத ஸ்டேட் வங்கி அறிமுகப்படுத்தி உள்ளது.எஸ்.பி.ஐ., வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரும் மறுசீரமைப்பு முயற்சியாக, அனைவருக்கும் வங்கிச் சேவை மற்றும் நுண்கடனுக்கு என தனிப்பிரிவு, எஸ்.பி.ஐ.,யில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக, கிராமப்புற மற்றும் சிறிய நகர்ப்புறங்களில், அனைவருக்கும் வங்கிச் சேவை மற்றும் நுண்கடன் பிரிவில் பிரத்யேக கவனம் செலுத்த, இந்தப் பிரிவு துவங்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரிவின் கீழ், விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகள் மற்றும் குறு, சிறு நிறுவனங்களுக்கு கடன்கள் வழங்கப்படும். இதற்காக, 8,000 கிளைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.‘‘எஸ்.பி.ஐ., அனைத்து குடிமக்களுக்கும், அனைத்து பிரிவுகளிலும் துணை நிற்கிறது என்பதை உறுதி செய்ய, இந்தப் பிரிவு துவங்கப்பட்டுள்ளது.
‘‘இந்தப் பிரிவு உருவாக்கம் வங்கியிலே சிந்தித்து, உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப் பட்டு இருக்கிறது,’’ என, வங்கியின் தலைவர் ரஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|