பதிவு செய்த நாள்
12 ஜூன்2020
22:18
புதுடில்லி:‘ஹேப்பியஸ்ட் மைண்டு டெக்னாலஜிஸ்’ நிவனம், புதிய பங்குகள்
வெளியீட்டுக்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு
விண்ணப்பம் செய்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த,ஹேப்பியஸ்ட் மைண்டு டெக்னாலஜிஸ் நிறுவனம், புதிய பங்குகளை வெளியிட்டு, அதன் மூலம், 110 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.
மேலும்,நிறுவனர்கள் வசம் இருக்கும்,3.56 கோடி பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது. நாட்டில், கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, மார்ச் மாதம் நாடு முடக்கபட்டது.
அதன் பிறகு, முதன் முதலாக பெரியளவிலான புதிய பங்கு வெளியீட்டுக்கு, இந்நிறுவனம் தான் விண்ணப்பம் செய்துள்ளது.இந்த புதிய பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை, நடைமுறை மூலதன தேவை மற்றும் பொதுவான நிறுவனத் தேவைகளுக்காக பயன்படுத்தி கொள்ள நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பெங்களூரை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம், பங்குகளை, மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தைகளில் பட்டியலிட உள்ளது.
இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ்
மற்றும் நோமுரா பைனான்ஷியல் அட்வைசரி மற்றும் செக்யூரிட்டீஸ் ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|