பதிவு செய்த நாள்
17 ஜூன்2020
00:03
சென்னை:ஊரடங்கால், பலரும் மின் விசை நிதி நிறுவனத்தின் அலுவலகத்திற்கு நேரில் செல்வதை தவிர்த்து, அந்நிறுவனம் சமீபத்தில் துவக்கியுள்ள, இணையளத சேவையின் கீழ், வைப்பு நிதியை செலுத்தி வருகின்றனர்.
தமிழக அரசின், தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனம், வங்கி சாரா நிதி நிறுவனமாக செயல்படுகிறது.இது, மக்களிடம் இருந்து திரட்டப்படும் வைப்பு நிதியை, மின் வாரிய திட்டங்களுக்கு கடனாக வழங்குகிறது.தமிழக அரசும், ‘பெண் குழந்தை பாதுகாப்பு’ உள்ளிட்ட திட்டங்களுக்கு வழங்கப்படும் நிதியை, மின் விசை நிறுவனத்தில் வைப்பீடு செய்கிறது. மக்களிடம் இருந்து, குறைந்தது, 25 ஆயிரம் ரூபாய் முதல் வைப்பு நிதி பெறப்படுகிறது.
அதற்கு, வங்கிகளை விட, அதிக வட்டி வழங்கப்படுகிறது. அதன்படி, மூத்த குடிமக்கள்
செலுத்தும் வைப்பு நிதிக்கு, ஓராண்டிற்கு, 7.75 சதவீதம்; இரு ஆண்டுகளுக்கு, 8 சதவீதம்;
ஐந்து ஆண்டுகளுக்கு, 8.75 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.மற்றவர்களுக்கு, ஓராண்டிற்கு, 7.50; 25 மாதங்களுக்கு, 7.75 சதவீதம்; ஐந்து ஆண்டுகளுக்கு, 8.25 சதவீதம் வட்டி
வழங்கப்படுகிறது.வைப்பு நிதியில் முதலீடு செய்ய விரும்புவோர், சென்னை, நந்தனத்தில் உள்ள மின் விசை நிறுவனத்தின் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டும்.
இந்நிலையில், அந்நிறுவனம், இணையதளம், மொபைல் செயலி வாயிலாக, எங்கிருந்தபடியும், எப்போது வேண்டுமானாலும், வைப்பு நிதி செலுத்தும் சேவையை, சமீபத்தில்
துவக்கியுள்ளது.ஊரடங்கு மற்றும் வைரஸ் பரவலில் இருந்து பாதுகாத்து கொள்ள, பலரும் வீடுகளை விட்டு வெளியே வராமல் உள்ளனர்.இதனால், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட
வருவாய் ஈட்டும் பிரிவினர் பலரும், மின் விசை நிதி நிறுவன அலுவலகத்திற்கு வருவதற்கு பதில், அதன் இணையதளம், மொபைல் செயலி வாயிலாக, வீட்டில் இருந்தபடி வைப்பு நிதியை செலுத்தி வருகின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|