பதிவு செய்த நாள்
17 ஜூன்2020
00:09
புதுடில்லி:கடந்த
ஆண்டில், உலகளவில், அன்னிய நேரடி முதலீட்டை அதிக அளவில் ஈர்த்த
நாடுகளில் இந்தியா, ஒன்பதாம் இடத்தைப் பெற்றுள்ளது என, ‘ஐக்கிய
நாடுகள் சபை’யின் வர்த்தக பிரிவு அறிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில், 3.86 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, இந்தியாவில் அன்னிய முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.
‘டாப் 20’ நாடு
இதையடுத்து, அதிக அளவில் அன்னிய முதலீடுகள் பெறப்பட்ட நாடுகளில், இந்தியா,
ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது.இது
குறித்து, ஐக்கிய நாடுகள் சபையின், வர்த்தகம்
மற்றும் மேம்பாட்டு
பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியா, கடந்த ஆண்டில், 3.86 லட்சம் கோடி ரூபாயை, அன்னிய முதலீடாக ஈர்த்துள்ளது.
இதுவே, இதற்கு முந்தைய ஆண்டில், 3.17 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. கடந்த,
2018ல், அன்னிய முதலீட்டை அதிகம் பெற்ற, ‘டாப் 20’ நாடுகளில்,
இந்தியா, 12 இடத்தை
பெற்றிருந்தது; தற்போது, ஒன்பதாவது இடத்துக்கு
முன்னேறி உள்ளது.
வளர்ந்து வரும் ஆசிய நாடுகளில் உள்ள, முக்கியமான ஐந்து நாடுகளில், இந்தியாவும் ஒன்றாக உள்ளது.கொரோனா
தாக்கத்துக்குப் பின், வளர்ச்சி குறைந்தாலும், அன்னிய
முதலீடுகளை
ஈர்க்கும் மிகப் பெரிய சந்தையாக, இந்தியா தொடர்ந்து விளங்கும்.நடப்பு
ஆண்டில், அன்னிய முதலீடுகள், உலக அளவில், 40 சதவீதம் அளவுக்கு குறையும் என
கருதப்படுகிறது.கடந்த,
2005ம் ஆண்டுக்குப் பிறகு, உலகளவில், 1 லட்சம் டாலர் என்ற நிலைக்கு
கீழே, அன்னிய முதலீடு முதல் முறையாக செல்லும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
45 சதவீதம்
ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை, நடப்பு ஆண்டில், அன்னியமுதலீடுகள், 45 சதவீதம்
அளவுக்கு குறையும் என கருதப்படுகிறது. தெற்கு ஆசியாவிலும் கணிசமாக இந்த ஆண்டு குறையும்.இந்தியாவைப்
பொறுத்தவரை, கொரோனா பாதிப்புக்கு முன், டிஜிட்டல்
பொருளாதாரம்,
ரியல் எஸ்டேட் ஆகிய இரண்டு துறைகளிலும், அதிக அளவு அன்னிய நேரடி
முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இனி, டிஜிட்டல் பொருளாதார துறையில் முதலீடுகள், முன்பிருந்தது போலவே தொடரும் என்றாலும், ரியல் எஸ்டேட் துறையில் குறிப்பிடத்தக்க அழுத்தங்கள் இருக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|