மின் விசை நிதி நிறுவனம் இணையதளத்தில் வைப்பு நிதிமின் விசை நிதி நிறுவனம் இணையதளத்தில் வைப்பு நிதி ...  ‘இந்தியா சிமென்ட்ஸ்’ நிர்வாகம் தமானி கையகப்படுத்த முயற்சி ‘இந்தியா சிமென்ட்ஸ்’ நிர்வாகம் தமானி கையகப்படுத்த முயற்சி ...
அன்னிய நேரடி முதலீட்டில் இந்தியாவுக்கு 9வது இடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2020
00:09

புது­டில்லி:கடந்த ஆண்­டில், உல­க­ள­வில், அன்­னிய நேரடி முத­லீட்டை அதிக அள­வில் ஈர்த்த நாடு­களில் இந்­தியா, ஒன்­ப­தாம் இடத்­தைப் பெற்­றுள்­ளது என, ‘ஐக்­கிய நாடு­கள் சபை’யின் வர்த்­தக பிரிவு அறிக்கை தெரி­வித்­துள்­ளது.


கடந்த ஆண்­டில், 3.86 லட்­சம் கோடி ரூபாய் அள­வுக்கு, இந்­தி­யா­வில் அன்னிய முத­லீ­டு­கள் செய்யப்­பட்­டுள்­ளன.

‘டாப் 20’ நாடு­

இதை­ய­டுத்து, அதிக அள­வில் அன்­னிய முதலீடு­கள் பெறப்­பட்ட நாடு­களில், இந்­தியா,
ஒன்ப­தா­வது இடத்­தைப் பிடித்­துள்­ளது.இது குறித்து, ஐக்­கிய நாடு­கள் சபை­யின், வர்த்­த­கம்
மற்­றும் மேம்­பாட்டு பிரிவு வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில் மேலும் கூறப்­பட்­டுள்­ள­தா­வது:

இந்­தியா, கடந்த ஆண்­டில், 3.86 லட்­சம் கோடி ரூபாயை, அன்­னிய முதலீடாக ஈர்த்­துள்­ளது.
இதுவே, இதற்கு முந்தைய ஆண்­டில், 3.17 லட்­சம் கோடி ரூபா­யாக இருந்­தது. கடந்த, 2018ல், அன்­னிய முத­லீட்டை அதி­கம் பெற்ற, ‘டாப் 20’ நாடு­களில், இந்தியா, 12 இடத்தை
பெற்­றி­ருந்­தது; தற்­போது, ஒன்­ப­தா­வது இடத்­துக்கு முன்­னேறி உள்­ளது.


வளர்ந்து வரும் ஆசிய நாடு­களில் உள்ள, முக்­கி­யமான ஐந்து நாடு­களில், இந்தி­யா­வும் ஒன்­றாக உள்ளது.கொரோனா தாக்­கத்­துக்­குப் பின், வளர்ச்சி குறைந்­தா­லும், அன்­னிய
முத­லீ­டு­களை ஈர்க்­கும் மிகப் பெரிய சந்­தை­யாக, இந்­தியா தொடர்ந்து விளங்­கும்.நடப்பு
ஆண்­டில், அன்னிய முத­லீ­டு­கள், உலக அள­வில், 40 சத­வீ­தம் அள­வுக்கு குறை­யும் என
கரு­தப்­ப­டு­கிறது.கடந்த, 2005ம் ஆண்­டுக்­குப் பிறகு, உல­க­ள­வில், 1 லட்­சம் டாலர் என்ற நிலைக்கு கீழே, அன்­னிய முத­லீடு முதல் முறை­யாக செல்­லும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

45 சத­வீ­தம்

ஆசிய நாடு­க­ளைப் பொறுத்­த­வரை, நடப்பு ஆண்­டில், அன்­னியமுத­லீ­டு­கள், 45 சத­வீ­தம்
அள­வுக்கு குறை­யும் என கரு­தப்­ப­டு­கிறது. தெற்கு ஆசி­யா­வி­லும் கணி­ச­மாக இந்த ஆண்டு குறை­யும்.இந்­தி­யா­வைப் பொறுத்த­வரை, கொரோனா பாதிப்­புக்கு முன், டிஜிட்­டல்
பொரு­ளா­தா­ரம், ரியல் எஸ்­டேட் ஆகிய இரண்டு துறை­க­ளி­லும், அதிக அளவு அன்னிய நேரடி முத­லீ­டு­கள் மேற்­கொள்ளப்­பட்­டன.


இனி, டிஜிட்­டல் பொரு­ளா­தார துறை­யில் முதலீடு­கள், முன்­பி­ருந்தது போலவே தொட­ரும் என்­றா­லும், ரியல் எஸ்­டேட் துறை­யில் குறிப்­பி­டத்­தக்க அழுத்­தங்­கள் இருக்­கும் என
எதிர்­பார்க்கப்­ப­டு­கிறது.இவ்­வாறு அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)