அன்னிய நேரடி முதலீட்டில் இந்தியாவுக்கு 9வது இடம்அன்னிய நேரடி முதலீட்டில் இந்தியாவுக்கு 9வது இடம் ...  பெரிய வங்கிகளில் கணக்கு தாவும் இந்திய நிறுவனங்கள் பெரிய வங்கிகளில் கணக்கு தாவும் இந்திய நிறுவனங்கள் ...
‘இந்தியா சிமென்ட்ஸ்’ நிர்வாகம் தமானி கையகப்படுத்த முயற்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2020
22:27

புதுடில்லி:‘இந்தியா சிமென்ட்ஸ்’ நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பங்குகளை வாங்கி, அதன் கட்டுப்பாட்டை தன் வசம் கொண்டு வரும் முயற்சியில், ராதாகிஷன் தமானி இறங்கி இருப்பதாக செய்திகள் வருகின்றன.

ராதாகிஷன் தமானி, ‘அவென்யு சூப்பர்மார்ட்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளரும், இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரருமாவார்.இந்தியா சிமென்ட்ஸ் செய்தி குறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வாங்கும் முயற்சியில், ராதாகிஷன் தமானி இறங்கி இருக்கிறார்.இது குறித்து, அதிகாரப்பூர்வமற்ற பேச்சுகள் நடத்தப்பட்டுள்ளன.தற்போது, இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின், 29 சதவீத பங்குகள், அதன் பங்குதாரரான, என்.ஸ்ரீனிவாசனிடம் இருக்கின்றன.

இந்நிலையில், இணக்கமான முறையில், நிர்வாகத்தை தன் வசம் ஈர்க்கும் முயற்சியில் தமானி இறங்கி உள்ளார். ஆனால், இது குறித்து எந்தவொரு முடிவுகளும் இன்னும் எடுக்கப்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.இருப்பினும் இந்த தகவலை, தமானி மற்றும் இந்தியா சிமென்ட்ஸ் தரப்புகள் மறுத்து உள்ளன.

தமானி மற்றும் அவர் குடும்பத்தினர், சமீபகாலமாக, இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகளை அதிகளவில் வாங்கி குவித்து வருகின்றனர்.மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, இவர்கள் வசம் கிட்டத்தட்ட, 20 சதவீத பங்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)