பதிவு செய்த நாள்
17 ஜூன்2020
22:27
புதுடில்லி:‘இந்தியா சிமென்ட்ஸ்’ நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பங்குகளை வாங்கி, அதன் கட்டுப்பாட்டை தன் வசம் கொண்டு வரும் முயற்சியில், ராதாகிஷன் தமானி இறங்கி இருப்பதாக செய்திகள் வருகின்றன.
ராதாகிஷன் தமானி, ‘அவென்யு சூப்பர்மார்ட்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளரும், இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரருமாவார்.இந்தியா சிமென்ட்ஸ் செய்தி குறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை வாங்கும் முயற்சியில், ராதாகிஷன் தமானி இறங்கி இருக்கிறார்.இது குறித்து, அதிகாரப்பூர்வமற்ற பேச்சுகள் நடத்தப்பட்டுள்ளன.தற்போது, இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின், 29 சதவீத பங்குகள், அதன் பங்குதாரரான, என்.ஸ்ரீனிவாசனிடம் இருக்கின்றன.
இந்நிலையில், இணக்கமான முறையில், நிர்வாகத்தை தன் வசம் ஈர்க்கும் முயற்சியில் தமானி இறங்கி உள்ளார். ஆனால், இது குறித்து எந்தவொரு முடிவுகளும் இன்னும் எடுக்கப்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.இருப்பினும் இந்த தகவலை, தமானி மற்றும் இந்தியா சிமென்ட்ஸ் தரப்புகள் மறுத்து உள்ளன.
தமானி மற்றும் அவர் குடும்பத்தினர், சமீபகாலமாக, இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகளை அதிகளவில் வாங்கி குவித்து வருகின்றனர்.மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, இவர்கள் வசம் கிட்டத்தட்ட, 20 சதவீத பங்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|