பதிவு செய்த நாள்
17 ஜூன்2020
22:29
புதுடில்லி:இந்திய நிறுவனங்களில் பல, தங்கள் கணக்கை, பெரிய, நிலையான வங்கிகளுக்கு மாற்றி வருகின்றன என, ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
‘கிரிசில்’ நிறுவனத்தின் துணை நிறுவனமான, ‘நியூ கிரீன்விச் அசோசியேட்ஸ்’ ஆய்வறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, இந்த ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கொரோனா பரவலால், நிதி துறை நிலை குறித்த கவலைகள் அதிகரித்த நிலையில், பல இந்திய நிறுவனங்கள், தங்களுடைய வங்கிக் கணக்கை பெரிய வங்கிகளுக்கு மாற்றத் துவங்கி உள்ளன.
இது குறித்து, கிரீன்விச் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் ஆசிய தலைவர் கவ்ரவ் அரோரா கூறியதாவது:கொரோனா பாதிப்புகளுக்கு முன்னரே, இந்திய வங்கி அமைப்பில் பல பிரச்னைகள் எழத் துவங்கி விட்டன. ‘யெஸ் பேங்க்’ உள்ளிட்ட வங்கிகள் சிக்கலுக்கு ஆளாகின. பல வங்கிகள், நிதிப் பிரச்னைகளில் சிக்கி நீடித்து செயல்படுமா என்ற சந்தேகங்களுக்கு ஆளாகின.
இப்போது சற்றும் எதிர்பாராத வகையில், மிகப் பெரிய பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.இதையடுத்து, இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் மத்திய தர நிறுவனங்கள், தங்கள் வங்கிக் கணக்கை, பெரிய வங்கிகளுக்கு மாற்றத் துவங்கி உள்ளன.இதனால், எஸ்.பி.ஐ., போன்ற பெரிய வங்கிகள் பலனடைய துவங்கி உள்ளன.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|