பெரிய வங்கிகளில் கணக்கு தாவும் இந்திய நிறுவனங்கள் பெரிய வங்கிகளில் கணக்கு தாவும் இந்திய நிறுவனங்கள் ...  இந்தியாவில் 'டிவி' தயாரிக்க 'சாம்சங், ஒன்பிளஸ்' திட்டம் இந்தியாவில் 'டிவி' தயாரிக்க 'சாம்சங், ஒன்பிளஸ்' திட்டம் ...
தாக்குதலை அடுத்து நிறுத்தப்பட்ட சீன இறக்குமதி, ‘ஆர்டர்’கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2020
22:33

கோல்கட்டா:இந்தியா – சீனா இடையே, கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலை அடுத்து, இந்திய இறக்குமதியாளர்கள், சீன இறக்குமதி, ‘ஆர்டர்’களை நிறுத்தி வைத்துள்ளனர். குறிப்பாக, கோல்கட்டாவைச் சேர்ந்த இறக்குமதியாளர்கள், சீன இறக்குமதி பொருட்களுக்கான புதிய ஆர்டர்களை நிறுத்தி வைத்துள்ளனர்.

இது குறித்து, கோல்கட்டா சுங்க வரி அலுவலக ஏஜென்டுகள் சங்கத் தலைவர் சுஜித் சக்ரபர்த்தி கூறியதாவது:சீனாவிலிருந்து பொம்மைகள் முதல், விளக்குகள், தொழிற்சாலை பொருட்கள் வரை இறக்குமதி ஆகின்றன. கொரோனா பாதிப்பு காரணமாக, ஏற்கனவே, 30 – 40 சதவீதம் அளவுக்கு இறக்குமதி குறைந்துவிட்டது.இப்போது, கல்வான் பள்ளத்தாக்கு பிரச்னைக்கு பின், இறக்குமதியாளர்கள் புதிய ஆர்டர்களை நிறுத்தி வைத்துள்ளனர். ஏற்றுமதியாளர்களும் தங்கள் கவலையை தெரிவித்துஉள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

சீனாவுக்கான ஏற்றுமதி குறித்து, பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் ரவி சேகல் கூறியதாவது:பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி, தற்காலிக பாதிப்பை சந்தித்து உள்ளது. பொதுவாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள், வணிகத்துடன் அரசியலை இணைத்துப் பார்க்க மாட்டார்கள்.இப்போதைய பிரச்னைகளால், ஏற்றுமதியாளர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்கலாம். ஆனால், பணம் குறித்த பிரச்னைகள் இல்லாதபட்சத்தில், ஏற்றுமதிகள் இயல்பாகவே இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதியாவதில், 20 சதவீதம், கோல்கட்டா துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி ஆகிறது. நாடு முடக்கப்பட்ட காரணத்தால், தற்போது, 4,000 கன்டெய்னர்கள் அங்கு தேங்கியுள்ளன.நாடு முடக்கப்பட்ட சமயத்தில், ஏற்றுமதி குறைவாகவும், இறக்குமதி அதிகமாகவும் இருந்தது. தற்போது, ஏற்றுமதி அதிகரித்து, இறக்குமதி குறைந்துள்ளது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும், ‘ஸ்மார்ட்போன்’ உள்ளிட்ட முக்கியமான, 20 பொருட்களில், 43 சதவீதம் சீனாவிலிருந்து இறக்குமதி ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இறக்குமதிக்கு கட்டுப்பாடு

டயர் இறக்குமதிக்கு மத்திய அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை, வாகன டயர் தயாரிப்பாளர்கள் சங்கம் வரவேற்றுள்ளது.இதனால் உள்நாட்டு தயாரிப்பு அதிகரிப்பதுடன், ஏற்றுமதியும் அதிகரித்து, வேலைவாய்ப்பு களும் பெருகும் என இவ்வமைப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் கனரக வாகனங்களுக்கான, ரேடியல் டயர்கள் மற்றும் பயணியர் கார்களுக்கான டயர்களைப் பொறுத்தவரை, 40 சதவீதத்துக்கும் அதிகமாக, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

டிராக்டர்களுக்கான டயர் இறக்குமதியில், நான்கில் மூன்று பங்கு டயர்கள், சீனாவிலிருந்து இறக்குமதி ஆகின்றன. இந்நிலையில், டயர் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்து அறிவித்துள்ளது, மத்திய அரசு.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)