பதிவு செய்த நாள்
17 ஜூன்2020
22:36
புதுடில்லி:'சாம்சங்' மற்றும் 'ஒன்பிளஸ்' ஆகிய இரு பெரும் நிறுவனங்களும், அவற்றின் ஸ்மார்ட், 'டிவி'களை, இந்தியாவில் பெருமளவில் தயாரிக்கும் திட்டத்தில் இறங்கி உள்ளன.
இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும், 'டிவி' பேனல்களுக்கான இறக்குமதி கட்டணம், பூஜ்ஜியம் ஆகும். இத்தகைய பயன்களை பெறும் வகையில், இந்தியாவிலேயே அதிக, 'டிவி'களை தயாரிக்க, இந்நிறுவனங்கள் திட்டமிடுகின்றன.'டிவி' தயாரிப்பை பொறுத்தவரை, அதன் தயாரிப்புச் செலவில், 70 சதவீதம், 'ஓப்பன் செல் பேனல்' எனும் பாகத்துக்கே ஆகிவிடுகிறது.
இப்போது, இந்த பேனலுக்கு இறக்குமதி கட்டணம் இல்லை என அறிவிக்கப்பட்டிருப்பதால், இந்தியாவில் தயாரிப்பது குறைந்த செலவாக இருக்கும்.சாம்சங் மற்றும் ஒன்பிளஸ் ஆகிய இரு நிறுவனங்களுமே, சீனாவைச் சேர்ந்த, 'ஸ்கைவொர்த்' நிறுவனம், அதன் ஐதராபாத் ஆலையில், 'டிவி'யை தயாரிப்பதற்காக உடன்படிக்கை செய்துள்ளன.சாம்சங் நிறுவனத்தைப் பொறுத்தவரை, நாட்டில் விற்பனையாகும்,
'டிவி'களில், 85 முதல், 90 சதவீத, 'டிவி'களை, இந்தியாவிலேயே தயாரிக்க உள்ளது. ஒன்பிளஸ் நிறுவனமும், முதன் முறையாக, அதன் பட்ஜெட், 'டிவி'களை, இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|