பதிவு செய்த நாள்
24 ஜூன்2020
13:36
புதுடில்லி:சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை சார்ந்திருப்பதை குறைப்பதற்கும், சுய சார்பை அதிகரிப்பதற்கும் உறுதிபூண்டுள்ளதாக, ‘எல் அண்டு டி’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
எல்லைப் பகுதியில் இந்திய வீரர்கள் சீன ராணுவத்தினரால் கொல்லப்பட்டதை அடுத்து, சீனப் பொருட்களை புறக்கணிக்கும் நிலை நாட்டில் அதிகரித்து வருகிறது.இதன் தொடர்ச்சியாக, ‘எல்.அண்டு டி’ நிறுவனமும், சீன பொருட்களை சார்ந்திருப்பதை குறைத்துவிடப் போவதாகத் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:நாட்டின் முன்னணி கட்டுமான, தொழில்நுட்ப, நிதி சேவை நிறுவனமான, எல் அண்டு டி ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை ஆதரித்து, உள்நாட்டு தொழில்துறை, சுய சார்பை அடைய உதவ உறுதி பூண்டுள்ளது.எல்லையில், நம் துணிச்சலான வீரர்களுக்கு நேர்ந்த துரதிருஷ்டவசமான சம்பவத்தால், நாட்டின் உணர்வுகள் தட்டி எழுப்பப்பட்டுள்ளன. கடந்த, 80 ஆண்டுகளுக்கும் மேலாக, தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனம் என்ற வகையில், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் சிறந்த தயாரிப்புகளை, உள்நாட்டில் உற்பத்தி செய்யும் கொள்கையுடன், நாங்கள் உறுதியாக நிற்கிறோம்.இதன் மூலம், அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் முழு ஆதரவு கொடுத்து, ‘ஆத்மநிர்பர் பாரத் அபியான்’ திட்டத்துக்கு துணை நிற்போம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|