பதிவு செய்த நாள்
25 ஜூன்2020
22:10
திருப்பூர்:ஜவுளி உள்பட ஐந்து துறைகள், இறக்குமதியை சார்ந்திராமல் இருப்பதற்காக,
ஊக்குவிப்பு திட்டத்தைச் செயல்படுத்தமத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
இறக்குமதியை நம்பாமல், உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து, ‘சுய சார்பு’ நிலையை எட்ட, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, பல்வேறு துறைகளுக்கு, உற்பத்தி சார்ந்த
ஊக்குவிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இது குறித்து அரசு அதிகாரிகள்
கூறியதாவது:
ஜவுளி, உணவு பதப்படுத்துதல், பேட்டரி, ஆட்டோ உதிரிபாகங்கள், நெட்வொர்க் தயாரிப்பு போன்ற தொழில்துறைகளை, உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு திட்டத்தில் சேர்க்கவும், அதிகபட்சமாக, 50 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஒதுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.உலகச் சந்தையை வசப்படுத்துதல், வேலைவாய்ப்பை அதிகரித்தலுடன், மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் இறக்குமதிக்கு சீனாவை சார்ந்திராமல், நம் நாட்டிலேயே தயாரிப்பதை
நோக்கமாக கொண்டு, இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.இவ்வாறு, அதிகாரிகள்
கூறினர்.
தொழில் துறையினர் கூறியதாவது:வேதிப்பொருட்கள் உட்பட சில மூலப் பொருட்களுக்கு, சீனாவையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இதற்கு காரணம், உலக சந்தையில், சீன
இறக்குமதிப்பொருளின் விலை மலிவாக இருப்பதுதான்.மலிவாகக் கிடைப்பதால், இதுவரை, மாற்று முயற்சியை, உற்பத்தியாளர்கள் மேற்கொள்ளாமல் இருந்தனர். ஊக்குவிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், உற்பத்தியாளர்களுக்கு அது கைகொடுக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|