பதிவு செய்த நாள்
25 ஜூன்2020
22:23
புதுடில்லி:‘ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், அவை விற்கும் பொருட்கள், எந்த நாட்டு
நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்ற தகவலை குறிப்பிட வேண்டும்’ என, உள்நாட்டு
வர்த்தகர் அமைப்பு கள் கோரி வருகின்றன.
இதையடுத்து, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் பிரதிநிதிகளை, தொழில்துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறையின் அதிகாரிகள் சந்தித்தனர்.இந்த சந்திப்பில், ‘அமேசான், பிளிப்கார்ட், ஸ்நாப்டீல், பெப்பர்பிரை, ஈ – பே’ உள்ளிட்ட பல நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அகில இந்திய வர்த்தகர்கள் சங்கத்தின் கூட்டமைப்பான, சி.ஏ.ஐ.டி., ‘ஒவ்வொரு மின்னணு வர்த்தக நிறுவனமும், அவை விற்கும் பொருட்கள், எந்த நாட்டின் தயாரிப்பு என்பது குறித்த தகவலை கண்டிப்பாக வழங்க வேண்டும். அப்படிச் செய்தால், நுகர்வோர் முடிவெடுக்க வசதியாக இருக்கும்’ என, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயலிடம் கோரிக்கை வைத்தது.
இது குறித்து, அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:பெரும்பாலான மின்னணு வர்த்தக நிறுவனங்கள், சீன பொருட்களையும் விற்பனை செய்து வருகின்றன. ஆனால், அது குறித்து நுகர்வோருக்கு எதுவும் தெரிவதில்லை. அண்மையில், அரசு கொள்முதல் இணையதளம் மூலம், பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள், பொருட்கள் எங்கு தயாரிக்கப்பட்டது என்பது குறித்து கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் என,உத்தரவிடப்பட்டுஉள்ளது.
இப்போது, அடுத்த கட்ட ஆலோசனை நடைபெற்றது.காணொலி மூலமான இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பல நிறுவனங்கள், இத்தகைய தகவல்களை வழங்க தயாராக இருப்பதாகவும்; ஆனால், கால அவகாசம் தேவை எனவும் கேட்டுக்கொண்டன.
மேலும், விற்பனையாளர்களிடமும் அரசு இது குறித்து பேசி, அவர்களது கருத்துக்களையும் அறிந்து கொள்வது அவசியம்என, ஆலோசனை தெரிவித்தன.இவ்விவகாரம் குறித்து,
இன்னும் ஒரு சந்திப்பு நடைபெற இருக்கிறது. அநேகமாக, ஜூலை மாதத்தில் இக்கூட்டம் நடைபெறக் கூடும்.இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட, ’பேடிஎம் மால்’ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பேச்சாளர்
கூறியதாவது:அரசின் இந்த முடிவை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம். இந்தியாவில் தயாராகும் பொருட்களை விற்பதில், அதிக ஆர்வத்துடன் இருக்கிறோம்.மேலும், எங்கு
தயாரிக்கப்பட்டது என்பது குறித்த விவரங்களை வெளியிடுவது குறித்து, எங்கள்
விற்பனையாளர்கள், வணிகர்களுடன் ஏற்கனவே பேச்சு நடத்த துவங்கி விட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.
சீனாவில் சிக்கல்
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட சரக்குகளை, ஹாங்காங்கில், சீன சுங்கவரிதுறையினர் தாமதப்படுத்தி வருகிறார்கள் என, சில ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துஉள்ளனர்.இது குறித்து, ’எப்.ஐ.இ.ஓ.,’ எனும், இந்தியஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின்தலைவர் எஸ்.கே.சராப் கூறியிருப்பதாவது:
சென்னையில், சுங்க அதிகாரிகள், சீன இறக்குமதி பொருட்களை தீவிர பரிசோதனைக்கு
உட்படுத்துவதாக தகவல்கள் வருகின்றன. இதனையடுத்தே, ஹாங்காங்கில், இந்திய
சரக்குகளை, சீன சுங்கத் துறையினர் தாமதப்படுத்துவதாக தெரிகிறது என, சில ஏற்றுமதியாளர்கள் எங்களிடம் தெரிவித்துள்ளனர்.சீன இறக்குமதி பொருட்களை தீவிரமாக
பரிசோதிப்பது தொடர்பாக, சுங்கத் துறைக்கு அதிகாரப்பூர்வமாக ஏதாவது தெரிவிக்கப்பட்டு உள்ளதா என்பது குறித்து ஆராயுமாறு வேண்டி, மத்திய வர்த்தக அமைச்சகத்துக்கு கடிதம் கொடுக்ப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|