பதிவு செய்த நாள்
26 ஜூன்2020
22:25
புதுடில்லி:எச்.யு.எல்., நிறுவனம், 'விவாஷ்' பிராண்டை முழுதாக கையகப்படுத்தி விட்டதாக அறிவித்துள்ளது.
'விவாஷ்' பெண்களுக்கான ஆரோக்கிய பராமரிப்பு பிராண்டு ஆகும். இது, 'கிளன்மார்க் பார்மசூட்டிக்கல்' நிறுவனத்துக்கு சொந்தமானதாகும்.எச்.யு.எல்., நிறுவனம்,விவாஷ் பிராண்டை கையகப்படுத்திவிட்டதாக அறிவித்த போதிலும், எவ்வளவு தொகைக்கு கையகப்படுத்தப்பட்டது என்பது குறித்த தகவல் எதையும் தெரிவிக்க வில்லை.
கடந்த மார்ச் மாதத்தில், விவாஷ் பிராண்டை கையகப்படுத்தப் போவதாக அறிவிக்கப் பட்டிருந்த நிலையில், தற்போது அந்த முயற்சி முழுமை பெற்றுள்ளது.விவாஷ் பிராண்டு, கிளன்மார்க் பார்மசூட்டிக்கல் நிறுவனத்தால், 2013ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதாகும். அறிமுகம் ஆன குறுகிய காலத்துக்குள்ளாகவே, சந்தையில், விவாஷ் நன்றாக காலுான்றி விட்டது.
எச்.யு.எல்., நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான சஞ்சீவ் மேத்தா கூறிய தாவது:'விவாஷ்' பிராண்டை கையகப்படுத்தியதன் மூலம், வேகமாக வளர்ந்து வரும், பெண்களுக்கான ஆரோக்கிய பராமரிப்பு பிரிவில், நாங்கள் நுழைவதற்கு ஒரு வாய்ப்பு உருவாகியிருக்கிறது. ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த விரும்பும் சமயத்தில், இந்த கையகப்படுத்துதல் நடைபெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகும். இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|