பதிவு செய்த நாள்
26 ஜூன்2020
22:33
கோவை:‘‘இந்திய ஜவுளிக்கு, ஜப்பான் சந்தையில் நல்ல வாய்ப்புகள் உள்ளன. ஏற்றுமதி செய்வதற்கு, 51 நிறுவனங்களும் தயாராக உள்ளன,’’ என்று, ஐ.டி.எப்., ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் கூறினார்.
ஐ.டி.எப்., எனும், இந்திய ஜவுளித் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் கூறியதாவது:கொரோனா தொற்றால் வீழ்ச்சியடைந்த ஜவுளித் தொழில், சிறிது சிறிதாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. மால்கள், ஷோரூம்களில் ஆடம்பர ஆடை விற்பனை, இன்னும் துவங்கவில்லை. ‘ஆன்லைன்’ வணிகத்தில் ஆடை விற்பனை மேம்பட்டு வருகிறது.
தொழில் நிறுவனங்கள், 40 முதல், 45 சதவீதம் இயக்கத்துக்கு வந்துள்ளன.குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு அளித்த கடனுதவி திட்டங்கள் பயனுள்ளதாக உள்ளன. புதிய வரைமுறைப்படி, அவசர கால கடன் ஈட்டுறுதி திட்டத்தில், 25 கோடி ரூபாய்க்கும் கீழ், கடன் இருந்தால் மட்டுமே கடனுதவி பெற முடியும். இந்த வரம்பை, 100 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும்.
நுாற்பாலைகள், ஆயத்த ஆடை தொழில் நிறுவனங்களின், ஒரு முறை கடன் மறுசீரமைப்புக் கான நிதியுதவியை, அரசு வழங்க வேண்டும். இந்திய ஜவுளிக்கு, ஜப்பான் சந்தையில் அதிக வாய்ப்புகள் உள்ளன. தற்போது, 1 சதவீதம் மட்டுமே, அந்நாட்டுக்கு இந்திய ஜவுளி ஏற்றுமதியாகிறது. ஜப்பானுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்ய, 51 நிறுவனங்கள் தயாராக உள்ளன. தேவையான வியாபார இணைப்பை ஏற்படுத்த உதவுமாறு, மத்திய அரசை நாடி உள்ளோம்.இவ்வாறு பிரபு தாமோதரன் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|