சிக்கலில் நாட்டின் வளர்ச்சி  எஸ்., அண்டு பி., கணிப்பு சிக்கலில் நாட்டின் வளர்ச்சி எஸ்., அண்டு பி., கணிப்பு ...  அச்சத்தில் சில்லரை விற்பனை கடைகள் சரி செய்யும் முயற்சியில் சீன நிறுவனங்கள் அச்சத்தில் சில்லரை விற்பனை கடைகள் சரி செய்யும் முயற்சியில் சீன ... ...
இந்திய ஜவுளிக்கு ஜப்பானில் வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2020
22:33

கோவை:‘‘இந்திய ஜவுளிக்கு, ஜப்பான் சந்தையில் நல்ல வாய்ப்புகள் உள்ளன. ஏற்றுமதி செய்வதற்கு, 51 நிறுவனங்களும் தயாராக உள்ளன,’’ என்று, ஐ.டி.எப்., ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் கூறினார்.
ஐ.டி.எப்., எனும், இந்திய ஜவுளித் தொழில் முனைவோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் கூறியதாவது:கொரோனா தொற்றால் வீழ்ச்சியடைந்த ஜவுளித் தொழில், சிறிது சிறிதாக முன்னேற்றம் அடைந்து வருகிறது. மால்கள், ஷோரூம்களில் ஆடம்பர ஆடை விற்பனை, இன்னும் துவங்கவில்லை. ‘ஆன்லைன்’ வணிகத்தில் ஆடை விற்பனை மேம்பட்டு வருகிறது.


தொழில் நிறுவனங்கள், 40 முதல், 45 சதவீதம் இயக்கத்துக்கு வந்துள்ளன.குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு அளித்த கடனுதவி திட்டங்கள் பயனுள்ளதாக உள்ளன. புதிய வரைமுறைப்படி, அவசர கால கடன் ஈட்டுறுதி திட்டத்தில், 25 கோடி ரூபாய்க்கும் கீழ், கடன் இருந்தால் மட்டுமே கடனுதவி பெற முடியும். இந்த வரம்பை, 100 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும்.

நுாற்பாலைகள், ஆயத்த ஆடை தொழில் நிறுவனங்களின், ஒரு முறை கடன் மறுசீரமைப்புக் கான நிதியுதவியை, அரசு வழங்க வேண்டும். இந்திய ஜவுளிக்கு, ஜப்பான் சந்தையில் அதிக வாய்ப்புகள் உள்ளன. தற்போது, 1 சதவீதம் மட்டுமே, அந்நாட்டுக்கு இந்திய ஜவுளி ஏற்றுமதியாகிறது. ஜப்பானுக்கு ஜவுளி ஏற்றுமதி செய்ய, 51 நிறுவனங்கள் தயாராக உள்ளன. தேவையான வியாபார இணைப்பை ஏற்படுத்த உதவுமாறு, மத்திய அரசை நாடி உள்ளோம்.இவ்வாறு பிரபு தாமோதரன் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)