பதிவு செய்த நாள்
02 ஜூலை2020
22:43
புதுடில்லி:கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், எல்.ஐ.சி., நிறுவனம், புதிதாக, 16 நிறுவன பங்குகளில் முதலீடு செய்துள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்த நிலையில், எல்.ஐ.சி., நிறுவனம் மிகச் சரியான முதலீட்டு முடிவுகளை எடுத்துள்ளதாக, பங்குச் சந்தைநிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.இக்காலகட்டத்தில், சந்தை சரிந்தபோது, மிகக் குறைந்த விலையில், புதிய பங்குகளில் முதலீட்டை
மேற்கொண்டுள்ளது, எல்.ஐ.சி., நிறுவனம். பொதுவாகவே, மார்ச் மாதத்தில் அதிகளவிலான பிரீமிய வசூல் மற்றும் பாலிசி விற்பனைகள் இருக்கும்.
இது நிறுவனத்துக்கு மிகவும் வசதியாகி விட்டது. இதனால், அதிகளவில் முதலீடுகளை
மேற்கொள்ள முடிந்துள்ளது.கடந்த, 2008ம் ஆண்டுக்குப் பிறகு, சந்தையில் மிக அதிகளவிலான ஏற்ற, இறக்கங்கள், நடப்பாண்டு மார்ச் மாதத்தில் தான் இருந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சந்தை சரிவில் இருந்த நிலையில், பல முதலீடுகளை, எல்.ஐ.சி.,
மேற்கொண்டிருக்கிறது.
எச்.சி.எல்., டெக்னாலஜிஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், மகாநகர் கியாஸ், அமர ராஜா
பேட்டரீஸ், இண்டஸ்இண்ட் பேங்க், பிர்லா டயர்ஸ், டாடா கன்ஸ்யூமர் புராடெக்ட்ஸ் உள்ளிட்ட, 16 நிறுவனங்களில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.மேலும், ஏற்கனவே கைவசம் இருக்கும் பங்குகளில், 43 பங்குகளில், தற்போது இருக்கும் முதலீட்டை அதிகரித்துள்ளது.மார்ச் மாத நிலவரப்படி, எல்.ஐ.சி., நிறுவனம், மொத்தம், 326 நிறுவனங்களில் பங்குமுதலீட்டை மேற்கொண்டிருக்கிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|