சீனாவை புறக்கணிக்க போவதாக டி.டி.கே., பிரெஸ்டீஜ் அறிவிப்பு சீனாவை புறக்கணிக்க போவதாக டி.டி.கே., பிரெஸ்டீஜ் அறிவிப்பு ... பெண்கள் மட்டும் தான் பாத்திரம் கழுவ வேண்டுமா ? பெண்கள் மட்டும் தான் பாத்திரம் கழுவ வேண்டுமா ? ...
ஸ்மார்ட் போன் சந்தை 48 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2020
22:22

புதுடில்லி:நாட்டின் ஸ்மார்ட்போன் சந்தை, ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 48 சதவீதம் சரிந்துள்ளதாக, ஆராய்ச்சி நிறுவனமான, ’கேனலைஸ்’, அதன் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நாட்டின் ஸ்மார்ட்போன் விற்பனை, ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 48 சதவீதம் சரிவைக் கண்டு, 1.73 கோடி போன்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளது.இந்த சரிவுக்கு, கொரோனா தொற்று பரவலும்; அதன் காரணமாக நாடு முடக்கப்பட்டதும் முக்கிய காரணம் ஆகும்.ஸ்மார்ட்போன் விற்பனையாளர்கள், மிகவும் சவாலான ஒரு சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.


ஒருபுறம், உற்பத்தி முற்றாக நிறுத்தப்பட்டது. மறுபுறம், தேவை கணிசமாக குறைந்து விட்டது. இதற்கிடையே, ‘ஆன்லைன்’ மற்றும் ஸ்டோர்கள் மூலமான விற்பனையும் பல இடங்களில் தடைசெய்யப்பட்டுவிட்டன.ஜூன் காலாண்டின் ஆரம்ப கட்டங்களில், உள்ளூர் உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில், சயோமி, ஒப்போ போன்ற நிறுவனங்கள், ஸ்மார்ட் போன்களை இறக்குமதி செய்தன.நாட்டில் ஸ்மார்ட்போன் சந்தையை மீட்டெடுப்பது என்பது சவாலான காரியமாக இந்த காலாண்டில் இருந்தது.


தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, சந்தைகள் திறந்ததும் விற்பனை அதிகரித்தது.ஆனால், உற்பத்தி குறித்த புதிய விதிமுறைகள், பணியாளர் பற்றாக்குறை ஆகியவை காரணமாக, உற்பத்தி கணிசமாக சரிந்தது.இந்த காலகட்டத்தில், முன்னணி விற்பனையாளர்களில், ஆப்பிள் நிறுவனம் மட்டுமே குறைந்த பாதிப்புக்கு ஆளானது. கிட்டத்தட்ட, 20 சதவீதம் அளவுக்கு மட்டுமே சரிவைக் கண்டு, 2.50 லட்சம் போன்கள் விற்பனை ஆகின.

சயோமி நிறுவனம், 30.9 சதவீத சந்தை பங்களிப்புடன், 53 லட்சம் போன்களை விற்பனை செய்து, முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில், ஒப்போவும்; மூன்றாவது இடத்தில், சாம்சங் நிறுவனமும் உள்ளன.கடந்த ஆண்டில், இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட போன்களில், 96 சதவீதம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை அல்லது, அசெம்பிள் செய்யப்பட்டவை ஆகும்.இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)