பதிவு செய்த நாள்
20 ஜூலை2020
02:19
‘ரியல் எஸ்டேட்’ துறைக்கு ஊக்கம் அளிக்கும் செய்தியாக, சொந்த வீடு வாங்க விரும்புகிறவர்களில் பெரும்பாலானோர், வீடு வாங்க இது பொருத்தமான நேரம் என கருதுவதாக ஆய்வு தெரிவிக்கிறது.
ரியல் எஸ்டேட் இணைய நிறுவனமான, 99ஏக்கர்ஸ்.காம் நிறுவனம் நடத்திய ஆய்வில், வீடு வாங்க விருப்பம் கொண்டவர்களில், 65 சதவீதத்தினர் சந்தைக்கு திரும்பியுள்ளதாகவும், இவர்களில், 33 சதவீதத்தினர் வீடு வாங்க இது பொருத்தமான நேரமாக கருதுவதாகவும் தெரிய வந்துள்ளது.வீடு வாங்க திட்டமிட்டுள்ளவர்களில், 32 சதவீதத்தினர் அதை இறுதி செய்யும் கட்டத்தில் இருக்கின்றனர் என்றாலும், 11 சதவீதத்தினர் அந்த முடிவை தள்ளி வைத்துள்ளனர்.
பெரும்பாலானோர் தங்கள் சொந்த பயன்பாட்டிற்காக வீடு வாங்க உள்ளனர். குறைவான சதவீதத்தினரே முதலீடு நோக்கில் வீடு வாங்க உள்ளனர். வீடுகளின் விலையும் குறையும் எனும் எதிர்பார்ப்பும் பரவலாக நிலவுகிறது.கொரோனா பாதிப்புக்கு மத்தியில், சொந்த வீடு இருக்க வேண்டும் என்பதை பலரும் முக்கியமாக கருதுகின்றனர். வாடகைக்கு வீடு தேடுபவர்கள் கூட, பாதுகாப்பான சூழல் அம்சத்தை முதன்மையாக கருதுகின்றனர் என்றும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|