தங்கம் இறக்குமதி சரிவு தங்கம் இறக்குமதி சரிவு ...  நிறுவனங்கள் பதிவில் புதியமுறை: மத்தியஅரசு அமல் நிறுவனங்கள் பதிவில் புதியமுறை: மத்தியஅரசு அமல் ...
‘அமேசான்’ நிறுவனம், ரூ. 15 ஆயிரம் கோடிக்கும்மேல் ஏற்றுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2020
22:30

புதுடில்லி:நாட்டிலுள்ள குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், அமேசானின் உலகளாவிய விற்பனை திட்டத்தின் கீழ், 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.‘அமேசான்’ நிறுவனம், கடந்த, 2015ல், உலகளாவிய விற்பனை திட்டத்தை அறிமுகம் செய்தது.


இதன் மூலம், இந்தியாவைச் சேர்ந்த குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், அமேசானின் உலகளாவிய, 15 இணைய தளங்கள் மூலம், வெளிநாடுகளில் தங்கள் பொருட்களை விற்பனை செய்வதற்கான வாய்ப்பு உருவானது.துவக்கத்தில், சில நுாறு விற்பனையாளர்களுடன் துவங்கப்பட்ட இத்திட்டத்தில், இப்போது, 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள் இணைந்திருக்கிறார்கள்.

வரும், 2025ம் ஆண்டுக்குள், 10 பில்லியன் டாலர் அதாவது, 75 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் அளவுக்கு, மொத்த ஏற்று மதியை அதிகரிக்க திட்டமிட்டிருப்பதாக, கடந்த ஜனவரியில், அமேசான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து, அமேசான் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அமித் அகர்வால் தெரிவித்து உள்ளதாவது:அமேசானின் உலகளாவிய விற்பனை திட்டத்தின் மூலம், உள்ளூர் நிறுவனங்கள், உலகளவில் தங்கள் விற்பனையை கொண்டு செல்ல முடியும்.இதன் மூலம், அவர்களால் உலகளவில் சிறப்பான பிராண்டுகளை உருவாக்க முடியும்.

முதல் நுாறு கோடி டாலர் மதிப்பிலான ஏற்றுமதியை எட்ட, மூன்று ஆண்டுகள் ஆனது. ஆனால் அடுத்த, 100 கோடி டாலரை எட்ட, 18 மாதங்களே ஆகியிருக்கின்றன.விரைவில், 1 கோடி குறு சிறு நடுத்தர நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்கும், 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் முயற்சித்து வருகிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)