பதிவு செய்த நாள்
21 ஜூலை2020
23:20
புதுடில்லி:பல இந்திய நிறுவனங்கள், கொரோனா தாக்கத்தை மீறி, இயல்பாக செயல்படுவதாகவும், அவை கூடுதலான ஆயத்தங்களுடனும், எதிர்கால திட்டங்களுடனும் செயல்பட்டு வருவதாகவும், எச்.எஸ்.பி.சி., ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்போது, இந்திய நிறுவனங்களில் கிட்டத்தட்ட பாதி நிறுவனங்கள், அதாவது, 46 சதவீத நிறுவனங்கள், தாங்கள் தொற்றுநோயால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளன. தயார் நிலைஇருப்பினும், பாதிக்கும் மேற்பட்ட நிறுவனங்கள், அதாவது, 54 சதவீத நிறுவனங்கள், தங்களால் இயன்றவரை அதற்கு தயாராக இருந்ததாகவும் தெரிவித்துள்ளன.
ஆய்வு மேற்கொண்ட அனைத்து நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்த சதவீதம், இரண்டாவதாக அதிகமாகும். மற்ற அனைத்து நாடுகளின் சராசரி, 45 சதவீதம் தான். உலகளவில், 14 சந்தைகளில் உள்ள, 2,600 நிறுவனங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இந்தியாவிலிருந்து, 200 நிறுவனங்கள் ஆய்வில் பங்கேற்றன.
கொரோனாவால், இந்திய நிறுவனங்கள் கடுமையான தாக்கத்தை எதிர்கொண்ட போதிலும், 29 சதவீத நிறுவனங்கள், இயல்பான நிலையிலேயே தொடர்ந்து செயல்பட்டு வருவதாக தெரிவித்தன.உலகளவில், சீனா மெயின்லேண்டில் இருக்கும் நிறுவனங்களுக்கு அடுத்து, அதிகளவில், இந்திய நிறுவனங்கள் தான், இயல்பான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளன.
இருப்பினும், 2 சதவீத இந்திய நிறுவனங்கள், நீண்ட காலம் நீடிப்பது குறித்த அச்சத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளன.தொழிலாளர்கள்அதேசமயம், 64 சதவீத இந்திய நிறுவனங்கள், தற்போதைய சூழலில், தங்களின் தயாரிப்புகள் அல்லது சேவைகளில் சாதகமான மாற்றங்களை காண்பதாக தெரிவித்துள்ளன.
இத்தகைய நேர்மறை எண்ணங்களில், சீனாவை பின்னுக்குத் தள்ளி, முதலிடத்தை இந்தியா பிடித்துள்ளது.மேலும், இந்தியாவை பொறுத்தவரை, வாடிக்கையாளர் தேவையில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக, 60 சதவீதம் நிறுவனங்களும், நிதி வசதிகள் பெறுவது எளிதாகி இருப்பதாக, 62 சதவீத நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
இருப்பினும், போதுமான தொழிலாளர்கள் கிடைக்கிறார்களா என்பதில், 53 சதவீதம் அளவுக்கே நம்பிக்கை தெரிவித்துள்ளன. 25 சதவீதம் நிறுவனங்கள், தற்போதைய நிலையில், இது குறித்து எதிர்மறை எண்ணத்துடனே இருக்கின்றன. உலகளவில், சீனா மெயின்லேண்டில் இருக்கும் நிறுவனங்களுக்கு அடுத்து, அதிகளவில், இந்திய நிறுவனங்கள் தான், இயல்பான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளன
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|