அமெரிக்காவில் வேலை  குறைகிறது ஆர்வம் அமெரிக்காவில் வேலை குறைகிறது ஆர்வம் ...  தொழிற்சாலைகளில் எஸ்.ஓ.பி.,  சி.ஐ.ஐ., தலைவர் தகவல் தொழிற்சாலைகளில் எஸ்.ஓ.பி., சி.ஐ.ஐ., தலைவர் தகவல் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
உச்சம் தொட்ட ரிலையன்ஸ்: பங்கு சந்தைகள் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2020
23:14

புதுடில்லி:மத்திய அரசு, பொருளாதார வளர்ச்சிக்காக புதிதாக ஊக்க நிதியை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்ததை அடுத்து, அதன் விளைவாக, இந்திய பங்கு சந்தைகள் நேற்று உயர்வைக் கண்டன.


மேலும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், கோட்டக் பேங்க் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்ததும், சந்தைகள் உயர்வுக்கு வழிவகுத்தது. நேற்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், 268.95 புள்ளிகள் அதிகரித்து, 38,140.47 புள்ளிகளில் நிலை பெற்றது. இது, 0.71 சதவீத உயர்வாகும்.


கடந்த மார்ச், 5ம் தேதிக்கு பின், முதன்முறையாக சென்செக்ஸ் நேற்று, 38 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது குறிப்பிடத்தக்கது.இதைப் போலவே, தேசிய பங்குச் சந்தையின் நிப்டி, 82.85 புள்ளிகள் அதிகரித்து, 11,215.45 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, 0.74 சதவீத உயர்வாகும்.‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவன பங்குகள், 3 சதவீதம் அதிகரித்து, இதுவரை இல்லாத உயர்வான, 2,060.65 ரூபாய் என்ற நிலையை எட்டியது.


இதற்கு, ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லரை வணிகத்தில், ‘அமேசான்’ முதலீடு செய்ய இருப்பதாக வந்த செய்திகள் காரணமாக அமைந்தன.இதையடுத்து, எஸ்.பி.ஐ., டெக் மகிந்திரா, ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், ஐ.டி.சி., கோட்டக் பேங்க் ஆகிய நிறுவன பங்குகளும் விலை உயர்வை கண்டன.மாறாக, ஆக்சிஸ் பேங்க், எச்.யு.எல்., இன்போசிஸ், டி.சி.எஸ்., எல் அண்டு டி., ஆகிய நிறுவன பங்குகள் விலை சரிவை கண்டன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)