பதிவு செய்த நாள்
23 ஜூலை2020
23:14
புதுடில்லி:மத்திய அரசு, பொருளாதார வளர்ச்சிக்காக புதிதாக ஊக்க நிதியை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்ததை அடுத்து, அதன் விளைவாக, இந்திய பங்கு சந்தைகள் நேற்று உயர்வைக் கண்டன.
மேலும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், கோட்டக் பேங்க் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்ததும், சந்தைகள் உயர்வுக்கு வழிவகுத்தது. நேற்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், 268.95 புள்ளிகள் அதிகரித்து, 38,140.47 புள்ளிகளில் நிலை பெற்றது. இது, 0.71 சதவீத உயர்வாகும்.
கடந்த மார்ச், 5ம் தேதிக்கு பின், முதன்முறையாக சென்செக்ஸ் நேற்று, 38 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது குறிப்பிடத்தக்கது.இதைப் போலவே, தேசிய பங்குச் சந்தையின் நிப்டி, 82.85 புள்ளிகள் அதிகரித்து, 11,215.45 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, 0.74 சதவீத உயர்வாகும்.‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவன பங்குகள், 3 சதவீதம் அதிகரித்து, இதுவரை இல்லாத உயர்வான, 2,060.65 ரூபாய் என்ற நிலையை எட்டியது.
இதற்கு, ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லரை வணிகத்தில், ‘அமேசான்’ முதலீடு செய்ய இருப்பதாக வந்த செய்திகள் காரணமாக அமைந்தன.இதையடுத்து, எஸ்.பி.ஐ., டெக் மகிந்திரா, ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், ஐ.டி.சி., கோட்டக் பேங்க் ஆகிய நிறுவன பங்குகளும் விலை உயர்வை கண்டன.மாறாக, ஆக்சிஸ் பேங்க், எச்.யு.எல்., இன்போசிஸ், டி.சி.எஸ்., எல் அண்டு டி., ஆகிய நிறுவன பங்குகள் விலை சரிவை கண்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|