பதிவு செய்த நாள்
23 ஜூலை2020
23:21
மதுரை:‘‘கொரோனா சூழலில், தொழிலாளர்களை பாதுகாக்க, தொழிற்சாலைகளில், ‘ஸ்டேண்டர்ட் ஆப்பரேட்டிங் புரசீஜர்’ – எஸ்.ஓ.பி., பின்பற்றப்படும்,’’ என, இந்திய தொழில் கூட்டமைப்பின் – சி.ஐ.ஐ., – தமிழ்நாடு தலைவர் ஹரி தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: மத்திய, மாநில அரசு வழிகாட்டுதல்படி, எஸ்.ஓ.பி.,யில் தொழிலாளர்களின் உடல், மனநலம் காக்க முக்கியத்துவம் தரப்படும்.தொழிலாளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை, கைகளை சுத்தம் செய்தல், முக கவசம் அணிதல் போன்ற பாதுகாப்பு அம்சங்களை பின்பற்ற வைக்கப்படுவர். பணியின் போது, முக கவசமும் வழங்கப்படுகிறது.
ஒரு மணி நேரத்தில் டாக்டர்
காய்ச்சல் அறிகுறி இருந்தால், தொழிற்சாலை கண்காணிப்பாளரிடம் தெரிவிக்கும் நிலையில், ஒரு மணி நேரத்தில் டாக்டர் வந்து பரிசோதனை செய்யும் வசதி ஏற்படுத்தப் படும். அறிகுறியை பொறுத்து, ‘ஸ்வாப் டெஸ்ட்’ எடுக்கப்படும். பாசிட்டிவ் வந்தால், சக தொழிலாளர்களும், 7 – 14 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க வைக்கப்படுவர்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|