சுற்றுச்சூழல் அனுமதிக்காக  28 தொழில் திட்டங்கள் காத்திருப்பு சுற்றுச்சூழல் அனுமதிக்காக 28 தொழில் திட்டங்கள் காத்திருப்பு ...  ஐ.டி.சி., நிறுவன லாபம் 25.30 சதவீதம் சரிவு ஐ.டி.சி., நிறுவன லாபம் 25.30 சதவீதம் சரிவு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
எஸ்.ஐ.பி., திட்டத்தின் மூலம் ரூ.50 ஆயிரம் கோடி முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2020
22:54

புதுடில்லி:நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில், எஸ்.ஐ.பி., எனும் திட்டத்தின் கீழ், மியூச்சுவல் பண்டுகளில் 50 ஆயிரம் கோடி ரூபாயை, சிறு முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர்.

இது குறித்து, ‘ஆம்பி’ எனும் மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் சங்கம் தெரிவித்துள்ளதாவது:நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், மியூச்சுவல் பண்டு திட்டங்களில், சீரான இடைவெளியில் பணம் செலுத்தும், எஸ்.ஐ.பி., எனும் திட்டத்தின் கீழ், 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


அதிக ஏற்ற இறக்கம்

இது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, 3 சதவீதம் அதிகமாகும். கொரோனா பரவல் காரணமாக, சந்தை அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் நிலையில், அதற்கு நேர்மாறாக இத்தகைய முதலீடு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்க விஷயமாகும். கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில், எஸ்.ஐ.பி., திட்டத்தின் மூலம், 50 ஆயிரத்து, 102 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.


இதுவே, கடந்த ஆண்டின் இதே காலத்தில் முதலீடு, 48 ஆயிரத்து, 757 கோடி ரூபாயாக இருந்தது.நடப்பு ஆண்டின் முதல் அரையாண்டில், சராசரியாக மாதம் ஒன்றுக்கு, 8,350 கோடி ரூபாய் இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

முதலீடுகள் அதிகரிக்கும்

இருப்பினும், கடந்த மூன்று மாதங்களாக முதலீடு குறைந்து வந்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில், 2018 நவம்பர் மாதத்துக்குப் பின், முதன் முறையாக முதலீடு, 8,000 கோடி ரூபாய்க்கும் கீழ் வந்துள்ளது.நாடு முடக்கத்தால், பொருளாதார செயல்பாடுகள் குறைந்ததை அடுத்து, முதலீடுகள் சில மாதங்களாக குறைந்துள்ளது. பொருளாதார நிலைமைகள் சீராகும் போது, மீண்டும் முதலீடுகள் அதிகரிக்கும்.இவ்வாறு தெரிவிக்கப் பட்டு உள்ளது.நடப்பாண்டில் முதலீடுகள்மாதம் முதலீடு (கோடிகளில்)ஜனவரி 8,532பிப்ரவரி 8,513மார்ச் 8,641 ஏப்ரல் 8,376மே 8,123ஜூன் 7,927

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)