பதிவு செய்த நாள்
26 ஜூலை2020
00:22
புதுடில்லி:மத்திய அரசின், அவசர கால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, 1.30 லட்சம் கோடி ரூபாய் கடனுக்கான ஒப்புதலை இதுவரை வங்கிகள் வழங்கி உள்ளதாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு, 100 சதவீத அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் மூலம், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக, 3 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கி அறிவித்திருந்தது. இதுவரை, 1.30 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடன்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன. 82 ஆயிரத்து, 65 கோடி ரூபாய் பயனர்களுக்கு வழங்கப்பட்டு விட்டது.
இதில், பொதுத்துறை வங்கிகள் மூலம், 71 ஆயிரத்து, 818 கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. இதில், 47 ஆயிரத்து, 631 கோடி ரூபாய் வழங்கப்பட்டு விட்டது.தனியார் துறை வங்கிகள், 58 ஆயிரத்து, 673 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் வழங்கி, 34 ஆயிரத்து, 433 கோடி ரூபாயை நிறுவனங்களுக்கு கொடுத்துள்ளன.
எஸ்.பி.ஐ., வங்கி மட்டும், 21 ஆயிரத்து, 27 கோடி ரூபாய் அளவிலான கடன்களுக்கு ஒப்புதல் வழங்கி, 15 ஆயிரத்து, 112 கோடி ரூபாயை கொடுத்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|