ஸ்மார்ட் போன் சந்தையில் சீன நிறுவனங்களுக்கு சரிவு ஸ்மார்ட் போன் சந்தையில் சீன நிறுவனங்களுக்கு சரிவு ... கொரோனா பாலிசி தொடர்பான அறிவுறுத்தல் கொரோனா பாலிசி தொடர்பான அறிவுறுத்தல் ...
கொரோனா பிரச்னைக்கு தீர்வு; ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம் முயற்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2020
15:15

கொரோனா பிரச்னைக்கு தீர்வு காண்பது மட்டுமே, அரசின் முக்கிய கடமையாக உள்ளது. மத்திய அரசின் ‘இன்வெஸ்ட் இந்தியா’ திட்டத்தின் கீழ், ‘ஆக் ஷன் கோவிட் – 19 டீம்’ அமைக்கப்பட்டு, கொரோனா பிரச்னைகளுக்கு தீர்வு காணும் ‘ஸ்டார்ட் அப்’ கம்பெனிகளுக்கு உதவியாக, 100 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிதியுதவி பெற்ற சில நிறுவனங்கள், என்ன முயற்சிகள் செய்துள்ளது என்று பார்க்கலாம்.
மைலாப்
இந்தியாவின் முதல் ‘கோவிட் டெஸ்டிங் கிட்’ தயாரிப்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளது. 2016ல் துவக்கப்பட்ட இந்நிறுவனம், ஒரு கோடி ரூபாய் நிதியுதவி பெற்றுள்ளது. தென்கொரிய நாட்டின் மாதிரியை எடுத்து கொண்டு, ‘டெஸ்டிங் கிட்’ தயாரித்து, அதில் வெற்றியும் கண்டுள்ளது. வெளிநாட்டில் விற்கப்படும் கோவிட் சோதனை கருவிகளை விட, இது மிகவும் விலை குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

எத்திரியல் மெஷின்ஸ்
ஒரே வென்டிலேட்டரை இரண்டு நோயாளிகளுக்கு எப்படி உபயோகிக்கலாம், அதுவும் பாதுகாப்பாக என்பதை பற்றி ஆராய்ச்சி செய்து, வெற்றி பெற்றுள்ளது இந்நிறுவனம். அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில், இதுபோன்ற வென்டிலேட்டர்கள் புழக்கத்தில் இருந்தாலும், அதிலுள்ள பிரச்னைகளை கட்டுப்படுத்த இயலவில்லை.ஆனால், இந்நிறுவனம் தயாரித்துள்ள, ‘3டி ஸ்பிளிட்டர்களை’ வென்டிலேட்டரில் பொருத்துவதன் வாயிலாக, இரு நோயாளிகளுக்கு உபயோகப்படுத்தலாம். இருவருக்கும், ‘கிராஸ் கண்டாமினேஷன்’ இல்லாத வகையில் பார்த்து கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம், 50 லட்சம் ரூபாய் நிதியுதவி பெற்றுள்ளது.

கர்கானா
கர்கானா, ஒரு டிசைன் மற்றும் மேனுபேக்சரிங் கம்பெனி. பி.பி.இ., உடைகளை, 3டி பிரிண்டிங், இன்செக் ஷன் மோல்டிங், மெஷினிங், பேப்ரிகேஷன் ஆகியவற்றை, தொழில்நுட்பம் உபயோகித்து உற்பத்தி செய்து வருகிறது. மற்ற பி.பி.இ., தயாரிப்பாளர்களுக்கு, அவர்களது தயாரிப்பில் தகுந்த ஆலோசனைகளையும் வழங்குகிறது. இதற்கு, 20 லட்சம் ரூபாய் நிதியுதவி கிடைத்துள்ளது.

கொரோனா சேப் கொரோனா பாதித்தவருக்கு உதவிகள் என்று, பெரியளவில் யாரும் செய்துவிட முடியாது. அதுபோன்ற நேரத்தில், நோயாளிகளை எங்கு அட்மிட் செய்வது, எந்த மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான படுக்கைகள் காலியாக இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பது மிகவும் சிரமம்.பலர், நோயாளியுடன் இதற்காக பல மணி நேரம் அலைய வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கிறது. அதற்குள், நோயாளி அபாய கட்டத்துக்கு செல்லும் வாய்ப்பு அதிகம். இதை தவிர்க்க, ஒரு ‘சாப்ட்வேர் கம்பெனி’ எல்லா மருத்துவமனைகளையும் இணைத்து, எத்தனை படுக்கை வசதிகள் காலியாக இருக்கின்றன என்பன உட்பட பல புள்ளி விபரங்களை தெளிவாக தருகிறது.
சந்தேகங்களுக்கு:
இ–மெயில், sethuraman.sathappan@gmail.com,
இணையதளம்:www.startupbusinessnews.com.

மொபைல் போன்: 98204 – 51259.
–சேதுராமன் சாத்தப்பன்–

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)