பதிவு செய்த நாள்
27 ஜூலை2020
00:17
யூ.சி பிரவுசர் செயலியில் தணிக்கை மற்றும் போலி செய்திகளை எதிர்த்தற்காக பணிநீக்கம் செய்யப்பட்டதாக, முன்னாள் பணியாளர் தொடர்ந்த வழக்கில் அலிபாபா நிறுவனரும், சீன தொழிலதிபருமான ஜேக் மாவுக்கு குருகிராம் கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், ஜூன் 15ம் தேதி, சீன ராணுவம் நடத்திய தாக்குதலில், இந்திய வீரர்கள், 20 பேர் வீரமரணமடைந்தனர். இந்த மோதலை அடுத்து இருநாட்டு எல்லையில் பதற்றமான சூழல் நிலவியது. இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் உள்ள சீன செயலிகளுக்கு தடை விதிக்கக்கோரி மத்திய அரசிடம், உளவு அமைப்புகள் பரிந்துரைத்தன. இதனை தொடர்ந்து டிக் டாக், ஷேர் இட், யூ.சி., பிரவுசர், கிளாஷ் ஆப் கிங்ஸ், டி.யூ., பேட்டரி சேவர், ஹெலோ, யூகேம் மேக்கப் உள்பட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. உள்ளடக்க தணிக்கை, பிற நாடுகளுக்காக செயல்பாட்டார்களா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சீன நலன்களுக்கு எதிரான உள்ளடக்கத்தை நிறுவனம் தணிக்கை செய்தததாகவும், அலிபாபா நிறுவனத்துக்கு சொந்தமான யூ.சி பிரவுசர் (UC browser) மற்றும் யூ.சி. நியூஸ் செயலியில், சமூக மற்றும் அரசியல் ரீதியான கொந்தளிப்பை ஏற்படுத்தும் வகையில் போலி செய்திகளை பதிவிட்டதாக யூ.சி .,வெப் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் புஷ்பந்திர சிங் பார்மர் ஜூலை 20ம், தேதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதனை விசாரித்த குருகிராம் மாவட்ட நீதிமன்றம், அலிபாபா நிறுவனம், தொழிலதிபர் ஜேக் மா மற்றும் நிறுவனத்தை சேர்ந்த 12க்கும் மேற்பட்டோர் , வரும் 29ம் தேதி நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாக ஆஜராக உத்தரவிட்டது. மேலும் இது தொடர்பாக அலிபாபா நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகிகள் 30 நாட்களுக்குள் எழுத்துபூர்வமாக பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், ‘இந்திய சந்தை மற்றும் அதன் உள்ளூர் ஊழியர்களின் நலனுக்கான அதன் உறுதிப்பாட்டில் நாங்கள் உறுதியற்றவர்களாக இருக்கிறோம். அதன் கொள்கைகள் உள்ளூர் சட்டங்களுக்கு இணக்கமாக உள்ளது. நடைபெற்று கொண்டிருக்கும் வழக்கு குறித்து எங்களால் கருத்து கூற முடியவில்லை’ என யூ.சி இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 2017 வரை குருகிராமில் உள்ள யு.சி. அலுவலகத்தில் பணியாற்றி வந்த புஷ்பந்திர சிங் பார்மர், சட்டவிரோத பணிநீக்கத்திற்கு எதிராக ரூ.2 கோடி இழப்பீடு கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|