பதிவு செய்த நாள்
29 ஜூலை2020
22:39
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், சரிவைக் கண்டுள்ளது.
மதிப்பீட்டு காலாண்டில், நிகர நஷ்டம், 249 கோடி ரூபாயாக இருப்பதாக, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இதுவே, கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், நிகர லாபம், 1,436 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்நிறுவனத்தின் விற்பனை, கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், 18 ஆயிரத்து, 735 கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், 3,678 கோடி ரூபாயாக சரிந்துள்ளது.மாருதி சுசூகி தெரிவித்திருப்பதாவது: நிறுவன வரலாற்றில் இது, இதற்கு முன் கண்டறியாத ஒன்றாகும். நிறுவனம், 2003ல், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பின், 17 ஆண்டுகளில் முதன் முறையாக நஷ்டத்தை கண்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக,முதல் காலாண்டின் பெரும்பகுதியில் பூஜ்ஜியம் தயாரிப்பும், பூஜ்ஜியம் விற்பனையும் நடைபெற்றிருந்தது.இந்த காலாண்டில், உற்பத்தி என்பது வழக்கமான இரு வார உற்பத்திக்கு சமமானதாகும். இந்த அடிப்படையில் தான் இந்த காலாண்டைப் பார்க்க வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|