பதிவு செய்த நாள்
15 ஆக2020
22:55
புதுடில்லி:போர்ட்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனம், அதன் பெயரை, 'பார்க்வே' என மாற்ற இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த பெயர் மாற்றத்துக்கு, கொள்கை அளவில், நிர்வாக குழு ஒப்புதல் வழங்கி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்ட்டிஸ் நிறுவனர்களிடமிருந்து தனித்து இருப்பதை உணர்த்தும் வகையில், மருத்துவமனை வணிகத்துக்கு இப்பெயர் மாற்றத்தை நிறுவனம் செய்ய இருப்பதாக தெரிகிறது.ஆரோக்கிய பாதுகாப்பு துறையில், 'பார்க்வே' எனும் பெயர், உலகளவில் பிரபலமான ஒன்றாகும். இந்த பிராண்டு, நார்த்தர்ன் டி.கே.வெஞ்சர் நிறுவனத்துக்கு சொந்தமான, ஐ.எச்.எச்., குழுமத்தைச் சேர்ந்ததாகும். நார்த்தன் டி.கே. வெஞ்சர் வசம், போர்ட்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின், 31 சதவீத பங்குகள் உள்ளன.
தற்போதைய போர்ட்டிஸ் ஹெல்த்கேர் பிராண்டு பெயருக்கான உரிமம், வரும் ஏப்ரலில் முடிவுக்கு வருவதால், புதிய பிராண்டு பெயருக்கான முயற்சிகள் துவங்கி உள்ளன. போர்ட்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனர்கள் ஷிவிந்தர் மோகன் சிங், மல்விந்தர் மோகன் சிங் ஆகியோர் மோசடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிறை சென்றது தனிக் கதை. இந்நிலையில், பழைய பெயரில் நிறுவனத்தை தொடரவேண்டாம் என முடிவெடுத்து, புதிய பெயருக்கான முயற்சிகள் துவங்கப்பட்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|