பதிவு செய்த நாள்
22 ஆக2020
01:33
புதுடில்லி,:அரசுக்கு சொந்தமான மின் நிறுவனமான என்.டி.பி.சி., புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வணிகத்துக்காக, புதிய நிறுவனம் ஒன்றை துவங்க அனுமதி பெற்றுள்ளது.
முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை நிறுவனமான டி.ஐ.பி.ஏ.எம்., மற்றும் நிடி ஆயோக் ஆகியவை புதிய நிறுவனத்தை துவக்க, தங்கள் இசைவை தெரிவித்துள்ளன.இந்த புதிய நிறுவனம், முழுக்க முழுக்க என்.டி.பி.சி., நிறுவனத்துக்கு சொந்தமானதாக இருக்கும்.
வரும் 2032ம் ஆண்டுக்குள், ஒட்டுமொத்த உற்பத்தியில், புதிப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்களிப்பு, 30 சதவீதமாக இருக்க வேண்டும் என இலக்கு வைத்துள்ளது, என்.டி.பி.சி., நிறுவனம். இதற்கு புதிய நிறுவனம் கைகொடுக்கும்.இதன் மூலம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை,அதிகளவில் தயாரிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|