வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வாராக் கடன் வங்கி அவசியம் தேவை: சுப்பாராவ்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
27 ஆக2020
00:52

புதுடில்லி: வாராக் கடன்களை நிர்வகிப்பதற்காக, தனியாக ஒரு வாராக் கடன் வங்கியை அமைப்பது என்பது தேவையானது மட்டுமல்ல; தவிர்க்க முடியாததும் ஆகும் என, ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் டி.சுப்பாராவ் கூறியுள்ளார்.
தற்போதைய சூழலில், வாராக் கடன்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், வாராக் கடன்களை நிர்வகிக்க தனியே ஒரு வங்கி அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:உலகில் திறமையாக வடிவமைக்கப்பட்டு, வெற்றிகரமாக இயங்கும் வாராக் கடன் வங்கிகள் பல இருக்கின்றன.
உதாரணமாக, மலேஷியாவில் இருக்கும் டானஹர்த்தா வங்கியை சொல்லலாம். நம் நாட்டில் ஒரு வாராக் கடன் வங்கியை அமைப்பதற்கு, இந்த வங்கி நல்ல மாதிரியாக இருக்கும்.வாராக் கடன் வங்கியின் முக்கிய நன்மை என்னவென்றால் ஊழல் இருக்காது. வட்டியிலும் தனிப்பட்ட ஆர்வங்கள் இருக்காது.தற்போதைய திவால் சட்ட கட்டமைப்புகள் போதாது. கூடுதல் சுமையை அவற்றால் சமாளிக்க முடியாது. எனவே தனியாக வாராக் கடன் வங்கி அவசியம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி குறைந்தபட்சம், 5 சதவீதம் அளவுக்கு சரிவைக் காணும் எனும் பட்சத்தில் வாராக் கடன்கள் பெருமளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.மேலும் ரிசர்வ் வங்கியின் அறிக்கையில், மார்ச், 2021ல், வாராக் கடன், 12.5 சதவீதம் அதிகரிக்கும் என கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

சரிவைக் கண்ட எல்.ஐ.சி., பங்குகள்தள்ளுபடி விலையில் வர்த்தகம் ஆகஸ்ட் 27,2020
மும்பை, : எல்.ஐ.சி., நிறுவன பங்குகள், சந்தையில் நேற்று பட்டியலிடப்பட்ட நிலையில், அதன் விலை எதிர்பார்த்ததற்கு ... மேலும்

புதுடில்லி : கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமத்துடன் போடப்பட்ட 49 ஆயிரத்து 129 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, ... மேலும்

பச்சை நிறத்துக்கு மாறியபங்குச் சந்தைகள் ஆகஸ்ட் 27,2020
மும்பை : பங்குச் சந்தைகள் நேற்று எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை கண்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான ... மேலும்

மொத்தவிலை பணவீக்கம் 15.08 சதவீதமாக உயர்வு ஆகஸ்ட் 27,2020
புதுடில்லி : நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், இதுவரை இல்லாத வகையில், 15.08 சதவீதமாக ... மேலும்

‘டுவிட்டர்’ ஒப்பந்தம்; தடை போட்ட மஸ்க் ஆகஸ்ட் 27,2020
லண்டன் : ‘டுவிட்டர்’ நிறுவனம், அதனிடம் 5 சதவீத அளவுக்கு மட்டுமே போலி மற்றும் ‘ஸ்பேம்’ கணக்குகள் இருப்பதற்கான ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!