அதிகம் பாதிக்கப்படாதது விவசாயத் துறை நடப்பாண்டில் 3.5 சதவீத வளர்ச்சி காணும் அதிகம் பாதிக்கப்படாதது விவசாயத் துறை நடப்பாண்டில் 3.5 சதவீத வளர்ச்சி ... ...  கைகள் நீண்டால்தான், மக்களுக்கு கொண்டாட்டம் ! கைகள் நீண்டால்தான், மக்களுக்கு கொண்டாட்டம் ! ...
விவசாய வளர்ச்சிக்கு உதவும், ‘ஸ்டார்ட் அப்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2020
11:49

விவசாயிகளுடைய முக்கியமான பிரச்னையே, அவர்களுடைய விளைபொருட்களுக்கு குறைவான பணம் கிடைப்பது, இரண்டாவது, விளைப்பொருட்களை விற்க முடியாமல் தவிப்பது, மூன்றாவது, பொருள் விற்ற பணம் மிகவும் தாமதமாக கிடைப்பது.



இதற்கு முக்கியமான காரணம், இடைத்தரகர்கள்.இவர்களை தவிர்க்கும் விதமாக, பல ‘ஸ்டார்ட் அப்’ கம்பெனிகள் துவக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுடன் நேரடியாக இருந்து பழம், காய்கறி ஆகியவற்றை வாங்கி, பெங்களூரு, சென்னை, டில்லி, ஐதராபாத், புனே, மும்பை போன்ற நகரங்களில் உள்ள சில்லறை கடைகளுக்கு விற்பனை செய்கிறார்கள். அதுவும், 12 மணி நேரத்தில், இந்த சரக்குகள் சில்லறை விற்பனையாளரை அடைவதால், நுகர்வோருக்கு, பழம், காய்கறிகள் ‘பிரஷ்’ ஆக கிடைக்கின்றன.

உரங்கள் ‘ஸ்டார்ட் அப்’
இதுதவிர, விவசாயிகளுக்கு தரமான பூச்சி மருந்து, உரம், விதை, விவசாய உபகரணங்கள் ஆகியவை கிடைப்பது மிகவும் முக்கியம். இந்த துறையில், புனேவை சேர்ந்த அக்ரோ ஸ்டார், இந்துாரை சேர்ந்த கிராமபோன், ஐதராபாத்தை சேர்ந்த கீத்தி நெக்ஸ்ட் ஆகியன முக்கிய பங்காற்றுகின்றன. இந்த ‘ஸ்டார்ட் அப்’ கம்பெனிகள் விற்பனை மட்டும் செய்யாமல், விவசாயிகளுக்கு, விவசாய விளைப் பொருட்களை மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்றும் கற்றுக் கொடுக்கின்றன.

இந்த ‘ஸ்டார்ட் அப்’ கம்பெனிகள், தற்போது ஊருக்கு ஊர் இருக்கும் விற்பனையாளர்களுடன் போட்டி போடுகின்றனர்.என்ன பயிரிடலாம்?விவசாயிகளின் விளை நிலங்களை ஆராய்ந்து, என்ன பயிரிட்டால் அது அவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று ஆராய்ந்து கூறுவதற்கு, பல, ஸ்டார்ட் கம்பெனிகள் தற்போது வந்துள்ளன. அவற்றில், முக்கியமானது ‘டிஜி அக்ரி’. இதுபோல, பாட்னாவை சார்ந்த ‘தி ஹாத்’ என்ற கம்பெனியும் பெரிய பங்காற்றி வருகிறது.

இறால் வளர்ப்பு
இந்தியா, இறால் வளர்ப்பில், உலகளவில் ஒரு முக்கிய நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது. தென்னிந்தியாவில், குறிப்பாக ஆந்திரா, தமிழ்நாடு ஆகியவை, இறால் வளர்ப்பில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றன. செயற்கை குளங்களில் வளர்க்கப்படுவதால், நீரின் சுத்தம், இறால்களுக்கு அளிக்கப்படும் உணவு வகை ஆகியவற்றை, தொடர்ந்து கண்காணிப்பது மிகவும் முக்கியம்.இவற்றை கருவிகள் வாயிலாக கண்காணிக்க, ஆந்திராவை சேர்ந்த ‘இருவாகா’ என்ற கம்பெனி ‘ஷிரிப்டாக்’ என்ற ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளது. இதை, அந்த செயற்கை குளங்களில் நிர்மாணிப்பதின் வாயிலாக, அந்த குளத்தின் நீரின் சுத்தம், இறால்களின் உணவு தேவைகள் ஆகியவை கண்காணிக்கப்படுகின்றன. இணையதளம்: www.eruvaka.com.

– சேதுராமன் சாத்தப்பன் –

சந்தேகங்களுக்கு: sethuraman.sathappan@gmail.com,

இணையதளம் www.startupbusinessnews.coல,

மொபைல் போன்: 98204 51259.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)