பதிவு செய்த நாள்
31 ஆக2020
22:16
புதுடில்லி:கடந்த ஜூலை மாதத்தில், நாட்டின் முக்கியமான எட்டு துறைகளின் வளர்ச்சி, 9.6 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.
இது குறித்து, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:தொடர்ந்து ஐந்தாவது மாதமாக, ஜூலையில், நாட்டின் முக்கியமான எட்டு துறைகளின் வளர்ச்சி, 9.6 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.
உருக்கு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள், சிமென்ட் ஆகியவற்றின் உற்பத்தியில் பெரும் சரிவு ஏற்பட்டது, இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில், இந்த எட்டு துறைகள், 2.6 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது.கச்சா எண்ணெய், நிலக்கரி, இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திரிப்பு பொருட்கள், உரங்கள், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகியவை, முக்கிய எட்டு துறைகளாக குறிப்பிடப்படுகின்றன.
இதில், உரங்கள் துறையை தவிர, மீதி ஏழு துறைகளுமே கடந்த ஜூலை மாதத்தில் சரிவை சந்தித்துள்ளன.உருக்கு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள், சிமென்ட், இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய், மின்சாரம் ஆகியவை முறையே, 16.5, 13.9, 10.2, 5.7, 4.9, 2.3 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளன.ஆனால், இவற்றுக்கு மாறாக உரங்கள் உற்பத்தி, 6.9 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.
இதுவே, கடந்த ஆண்டு ஜூலையில், 1.5 சதவீதமாக குறைந்து இருந்தது.நடப்பு ஆண்டில், கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில், முக்கியமான எட்டு துறைகளின் வளர்ச்சி, 20.5 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டுள்ளது. இதுவே கடந்த ஆண்டு இதே காலத்தில் வளர்ச்சி, 3.2 சதவீதம் அதிகரித்திருந்தது.இவ்வாறு அமைச்சகத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|